07 January, 2012

செக்குக்கு செக்

முன்பெல்லாம் பெரும்பாலான ஆபிஸ்களில் பேங்க் வேலைகளுக்கென்றே  தனியாக ஒரு ஆளை வேலைக்கு வைத்திருப்பார்கள். Officeலயே பொறுமையின் சிகரமாக இருக்கிற ஆளு தான் அதுக்கு லாயக்கு. சர்வசாதாரணமாக அரைநாள் பொழுது ஓடி விடும்.  இப்ப எவ்வளவோ தேவலை. பணம் எடுப்பது, செக் போடுவது போன்ற வேலைகள் பேங்குக்கு வெளியிலேயே முடிந்து விடுவதால் பேங்கில் பாதி கூட்டம் காலி. மேலும் வங்கி கிளைகளையும் அதிகப்படுத்தி விட்டார்கள். வங்கிகளும் அதிகமாகிவிட்டது. தனியார் வங்கிகள் உள்ளே நுழைந்தது தான் இந்த மாற்றங்களுக்கு பெருமளவு காரணம் என்றாலும், Bank Service என்ற காலம் போய் Banking Business என்று மாறி விட்டதால் இந்த மாற்றங்களுக்கு எல்லாம் விலை நம் தலையில் தான். தனியார் வங்கிகள்  Charge செய்யும் விதத்தை பார்த்தால் அதுக்கே தனியாக சம்பாதிக்க வேண்டியிருக்கிறது.





மேலும் புதிது,புதிதாக யோசிக்கிறோம் என்ற பெயரில் RBI வங்கிகளுக்கு சில விஷயங்களை விரைவில் செயல்படுத்த சொல்லியிருக்கிறது. அதில் ஒன்று மொபைல் போன் நிறுவனங்களின் MNP  (செல்போன் நம்பர் மாற்றாமல் கம்பெனி மாற்றிக் கொள்வது) மாதிரி நமது வங்கிக்கணக்கு எண்ணை மாற்றாமல் ஒரு வங்கியிலிருந்து மற்ற வங்கிக்கு மாற்றிக்கொள்ளும் வசதியை அறிமுகப்படுத்த சொல்லியிருக்கிறது. இதில் என்ன பெரிய உபயோகம் என்றே தெரியவில்லை. நாம் என்ன வங்கி எண்ணை ஊர் முழுவதும் தண்டோரா போட்டா சொல்லிக்கொண்டு இருக்கிறோம். மாற்றுவதற்கு யோசிக்க!, மேலும் நான் ஆரம்பித்த வங்கி எண்ணே இப்போது என்னிடம் இல்லை. Update செய்கிறோம் என்று 5 எண்ணில் இருந்த கணக்கு எண் 10 எண்ணாகி விட்டது. சரி தான்! Numerology பார்க்கும் யாருக்காவது தேவைப்படலாம்.





அடுத்தது, இப்பொழுது இருக்கும் செக்கை எல்லாம் தூக்கி போட்டு விட்டு எல்லா வங்கிகளும் ஒரே ஒழுங்கு முறையில் Computerized Cheque ஆக வெளியிட ஆணையிட்டுள்ளது. அதாவது, ATM Machine ல் கார்டை நுழைத்தவுடன் நமது வண்டவாளம் எல்லாம் தெரிந்து விடுவது போல், அனைத்து வங்கி கிளைகளிலும் ஒரு Machine ஐ வைத்து அதில் நாம் கலெக்சனுக்கு போடும் செக்கை நுழைத்தவுடன் துட்டு இருக்கா? இல்லையா? என புட்டு, புட்டு வைத்து விடும். இப்பொழுது Any Where Cheque  இருந்தாலும் Rural பகுதிகளில் கலெக்சன் போட்டால் அது அருகில் இருக்கும் பெரிய நகர கிளைக்கு வந்து பின் தான் கலெக்சன் ஆகும். அதற்கு மூன்று நாட்களாவது ஆகும். சாதாரண செக்காக இருந்தால் சொல்லவே வேண்டாம். செக் கலெக்சனுக்கு போட்டதை மறந்து போன பிறகு தான் நமது அக்கவுண்டுக்கே பணம் வரும். RBI சொல்லியபடி எல்லா வங்கிகளும் செயல்படுத்தி விட்டால் செக் கலெக்சனில் தேவையில்லாத கால தாமதம் மற்றும் தபால் செலவு போன்றவை பெருமளவு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 




டிஸ்கி:

செக் நாம் கலெக்சனுக்கு போட்டிருந்தால் சந்தோசம், ஆனால் நாம் பிறருக்கு கொடுத்திருந்தால் உடனே கலெக்சனுக்கு வந்திரும் ஜாக்கிரதை. இந்த முறை அமுலுக்கு வந்தால் Plan பண்ணி எல்லாம் செக் கொடுக்க முடியாது, 

கையில காசு பார்டியிடம் செக்.


மீண்டும் சந்திப்போம். 



6 comments:

  1. Ha . . Ha. . Ethukuthan nan bank la account vaikala. . .

    ReplyDelete
  2. கையில காசு பார்டியிடம் செக்.

    பலவிஷயங்களை அறியத்தந்த பகிர்வுக்கு நன்றி..

    ReplyDelete
  3. @இராஜராஜேஸ்வரி
    வருகைக்கும், பகிர்வுக்கும் நன்றி!

    ReplyDelete

என்னை திட்டவும், தீட்டவும் கருத்திடுக

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...