27 December, 2011

கலைஞரின் சின்ன சின்ன மலர்கள்

                                        அரசியல் ரீதியாக  கலைஞரை விமர்சிப்பவர்கள் கூட  இலக்கியம் என்று வரும் போது  கலைஞரை பாராட்டாமல் இருக்க முடியாது. சிறந்த இலக்கியவாதியாக பல ஆண்டுகளாக வலம் வரும் கலைஞர் கருணாநிதி முரசொலி பொன்விழாவை ஓட்டி தினமும் தன் கருத்துக்களை 'சின்ன சின்ன மலர்கள்' என்ற பெயரில் எழுதி வந்தார்.  அதில் சில மலர்கள்.







                            " அளந்து பேசு ;
                              அதற்காக அளக்காதே!
                              நினைத்துப்பேசு ;
                              ஆனால் நினைத்ததையெல்லாம் பேசாதே! "



                           "  அரங்கேற்றத்திலே மேதையாக யாரும்
                               திகழ்ந்து விட முடியாது ;
                              ஆனால்
                              அரங்கேற்றத்திலேயே " இவர்கள் மேதையாக
                              வருவார்களா ; இல்லையா?  என்பதை அறிய முடியும். "



                           "  அடிமையாக இருப்பவன், தனக்கு கீழே ஓர் 
                              அடிமை இருக்க வேண்டுமென்று கருதினால்
                              உரிமைகளைப் பற்றிப் பேச அவனுக்கு
                              உரிமையே கிடையாது "



                          "   தேன்கூடும் கஞ்சனின் கருவூலமும் ஒன்றுதான்!
                               காரணம் ;
                               இரண்டுமே அவற்றை நிரப்பிட உழைத்தவர்க்குப் 
                               பயன்படுவதில்லை ! "




                          "  புத்தகத்தில் உலகத்தைப் படித்தால்
                             அறிவு செழிக்கும் !
                             உலகத்தையே புத்தகமாக படித்தால்
                            அனுபவம் தழைக்கும் !. "

   


                          "  'நெஞ்சு பொறுக்குதில்லையே நிலைகெட்ட
                              மனிதரை நினைத்து விட்டால் ' என்றான் பாரதி!
                              என் செய்வது ;
                              நெஞ்சே இருப்பதில்லையே நிலைகெட்ட 
                              மனிதர்களுக்கு !. "




                          "  ஒருவர் எத்தனை ஆண்டு வாழ்கிறார் என்பதை
                              அவர் இறந்து போன நாளில் இருந்து கணக்கிட்டு
                              தெரிந்து கொள்ளலாம். "




                           "  மனசாட்சி உறங்கும் போது தான்
                              மனக்குரங்கு ஊர் சுற்றக் கிளம்புகிறது. "    









மீண்டும் சந்திப்போம்.


22 December, 2011

உயிரை கொடுத்து போராடாதீர்கள்



                                 தமிழகத்தில் சமீபகாலமாக போராட்டங்கள் பல்வேறு ரூபங்களில் தொடந்து வந்து கொண்டே இருக்கிறது.ஆனால் ஒவ்வொரு போராட்டத்தின் போதும் சிலர் தீக்குளித்தோ, அல்லது வேறு முறையிலோ தற்கொலை செய்து கொள்வதும் தொடர்கதையாக உள்ளது. உயிரின் மதிப்பு சாதாரண மனிதர்களை விட உயிரை துணிந்து போராட்டத்தில் இறங்குபவர்களுக்கு ரொம்ப நன்றாகவே தெரியும். 
  


                                              உயிரைக் கொடுத்து போராட வேண்டும் என்று சொல்வது போராட்டத்தின் இறுதி எல்லையை குறிப்பிட தானே தவிர எல்லை மீறுவதற்கு அல்ல!.  அந்த எல்லையையும் தாண்ட துணிந்தவர்கள்  உயிருடன் இருந்திருந்தால்  அந்த போராட்டத்தையும் வென்று , அடுத்த போராட்டத்திற்கும் தலைமை ஏற்றிருப்பார்கள். உயிரை விட மேலாக சமூகத்தின் மீது அக்கறை கொண்டவர்களே ! , நீங்கள் இந்த நாட்டிற்கு அஸ்திவாரம் போன்றவர்கள்.மக்கள் கவனத்தை போராட்டத்தின் பக்கம் திருப்பவோ, போராட்டத்தை வெல்லவோ பல வழிகள் இருக்கின்றன. மேலும் தற்கொலைகளால் எந்தப்போராட்டமும் வென்றதில்லை, இருந்து போராடியவர்கள் தான் வென்று தந்து இருக்கிறார்கள்.



                                                   தாங்கள் சார்ந்த கட்சிக்காக, அல்லது இயக்கத்திற்காக என்று நாம் பல தற்கொலைகளை பார்த்திருக்கிறோம். தற்கொலை எந்த காரணத்திறகாக இருந்தாலும் அது கோழைத்தனம் தான். போராட்டக்காரர்களுக்கு அது அழகல்ல. ஒன்று நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். எந்த தலைவனும் இது வரை தங்கள் போராட்டத்திற்காக தற்கொலை செய்து கொண்டதில்லை.   அப்படியானால் போராட்டத்திற்காக உயிரையே கொடுத்தவர்களின் உயிருக்கு மதிப்பில்லையா?. இருக்கிறது. நிறைய மதிப்பிருக்கிறது. அதை அவர்களுக்கு புரிய வையுங்கள்.



                                                   தற்கொலை செய்து கொண்டவர்களை தியாகி ஆக்கும் போது அது போல் நொறுங்கி கிடக்கும் மேலும் சில நெஞ்சங்களுக்குள் சிறு பொறியை ஊதி விடுகிறோம் என்று நினைவில் கொள்ளுங்கள்.  ஒருவர் தற்கொலை செய்து கொண்டதால் நமது போராட்டம் வலுப்பெற்றது என்று சொல்லாமல் நமது போராட்டம் மிகப்பெரிய போராளியை இழந்து தவிக்கிறது என்று இருப்பவர்களுக்கு உணர செய்யுங்கள். தீக்குளித்த அப்பாவி இதயங்களின் சூட்டில் குளிர் காய வேண்டாம். எனவே நன்பர்களே இனி களம், காரணம் எதுவாக இருந்தாலும் 



                                                      இருந்து போராடுங்கள்
                                                      இறந்து போராடாதீர்கள்.




மீண்டும் சந்திப்போம்.

  

15 December, 2011

படமும் செய்தியும்

                                   செம கொத்து படமாக வெளிவந்த 'தீபாவளி' படத்தில் இடம்பெற்ற அட்டகாசமான 'போகாதே,போகாதே' பாடலில் லாஜிக்கே இல்லாமல் ஒரு காட்சி வரும். ( ஒரு காட்சி மட்டுமா?).  பெட்ரோல் பங்கில் பாவனா, கூட வந்தவரை விட்டுவிட்டு ஜெயம் ரவியுடன் (ஹெல்மேட் போட்டிருப்பதால்) போவது போல் காட்சி வரும். இது படம்.




                                                      நெல்லையில் இரண்டு தினங்களுக்கு முன்பு பெட்ரோல் பங்கில் இரவு நேரத்தில் பெட்ரோல் போட வந்த இரண்டு வெவ்வேறு தம்பதிகள் கரண்ட் கட் மற்றும் ஒரே பைக், ஒரே ஹெல்மேட் போன்ற காரணத்தால் (நெல்லையில் ஹெல்மேட் போடவில்லை என்றால் பிடிக்கிறார்களா?) ஒரு பெண் மற்றொருவர் பைக்கில் ஏறி போய் விட்டாராம். கணவன் மனைவியை காணவில்லையே என செல்லில் அழைக்க, பிறகு விஷயம் தெரிந்து  அவரவர்கள், அவரவர்களுடன் வீட்டிற்கு போய் இருக்கிறார்கள். என்னத்த சொல்ல, பைக், ஹெல்மேட் எல்லாம் அடையாளம் பார்த்து வைச்சவங்க கொஞ்சம் புருஷனையும் அடையாளம் பார்த்து வைச்சிருக்க்லாம்.  இது செய்தி.




                                           நான் ஒரு நாள் ஒரு கடையில் பர்சேஸ் செய்து கொண்டிருக்கும் போது இப்படித்தான் கொஞ்சம் வயதான தம்பதி பர்சேஸ் செய்து விட்டு கிளம்பும் போது அவரு வாங்கின பொருட்களையெல்லாம் Activa வில் முன்னாடி வைத்து விட்டு 'சரி ஏறு' என்று வண்டியை ஸ்டார்ட் செய்து பேசிக்கொண்டே கிளம்பி விட்டார். இந்தம்மா 'என்னங்க, என்னங்க' என்று சன்னமாய் இரண்டு தடவை கூப்பிட்டு விட்டு பேசாமல் நின்று விட்டார். நான் என்னம்மா? செல்லில் வேணும்னா கூப்பிடுங்க! என்றேன். அதற்கு அந்த அம்மா ரொம்ப கூலாய், அதெல்லாம் வேண்டாம். வீட்டிற்கு போன பிறகு, பின்னாடி நான் இல்லேன்னு தெரிஞ்சவுடன் திரும்பி வந்து கூட்டிக்கொண்டு போய் விடுவார் என்றார். (ரெகுலர் போல) நான் ஷாக்காயிட்டேன். என்னடாது ! , வீட்டிற்கு போய் தான் பார்ப்பாரா?  பேசிக்கிட்டே போற மனுசன் பின்னாடி பதில் வரலேயேன்னு திரும்பி பார்க்க மாட்டாரான்னா? , அந்தம்மா 'நான் எங்க பேசறது, கல்யாணம் ஆனதில இருந்து அவர் தான் பேசிக்கிட்டே இருக்காருங்கறாங்க.  வாயே திறக்காத மனைவின்னா யார் தான் திரும்பி வந்து கூட்டிட்டு போகாம இருப்பாங்க.  அதெல்லாம் கொடுப்பினை சார்.


மீண்டும் சந்திப்போம்.


12 December, 2011

ஸ்டைல் மன்னனின் ஸ்பெசல் படங்கள்

                                                     ரஜினி - மூன்று எழுத்து மந்திரம்.  இது வருடக்கணக்கில் கணக்கில்லாத ரசிகர்களை கட்டி வைத்திருக்கிறது. சிறு வயதில் ஆரம்பித்து என் ரசனைக்கு பிடித்தமான நபர்களாக  இன்று வரை மாறாமல் இருந்து வருபவர்கள் ரஜினியும், இளையராஜாவும் தான். வேகம், ஸ்டைல் இது தான் ஆரம்பத்தில் ரஜினியிடம் என்னை மிகவும் ஈர்த்த விஷயங்கள். என்னை கவர்ந்த சில ரஜினி படங்களின் போட்டோ  ரஜினி பிறந்தநாள் ஸ்பெசலாக. (சில படங்கள் லோடாக கொஞ்சம் லேட்டாகும், ரஜினியின் வேகத்துக்கு இணையம் ஈடு கொடுக்க முடியாதல்லவா !! )




























































சூப்பர்ஸ்டாருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்


மீண்டும் சந்திப்போம்


10 December, 2011

யுவன் ராஜபாட்டை

                                                                                  யூத் ஐகான் என அழைக்கப்படும் யுவன்  சங்கர் ராஜாவின் இசையில் சுசீந்திரனின் இயக்கத்தில்  விக்ரம் நடித்துள்ள
ராஜபாட்டை படத்தின் இசை வெளியாகி உள்ளது. சில சறுக்கல்களுக்கு பிறகு விக்ரம் நம்பும் படம்,  நல்ல படங்கள் வரிசையில்உள்ள வெண்ணிலா கபடி குழு, அழகர்சாமியின் குதிரை மற்றும் இயல்பானகமர்சியல் படமாக வந்து வெற்றி பெற்ற  நான் மகான் அல்ல படத்திற்கு பிறகு சுசீந்திரன் இயக்கும் படம்.



                                           
                                                                   பாடல்களை பொறுத்த வரை 80 களில் வந்த இளையராஜா பாடல்கள் மற்றும் சில ஹிந்தி பாடல்களை கலந்து வழக்கமான யுவன் ஸ்டைலில் கேட்பது போல் உள்ளது. கேட்டவுடன் பிடிக்கிறது. 80 களின்
சாயல் சுசீந்திரன் சாய்ஸ் ஆக கூட இருக்கலாம். (ஏதாவது ஒரு காட்சியில் புரோட்டாவின் விலையில் படம் நடக்கும் கால கட்டத்தை சுட்டிக்காட்டுவார்.)
சிட்டியின் ஹாட் டாபிக்கான நில அபகரிப்பு மோசடியை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள  படம். விக்ரம் ஜிம் மாஸ்டராக வருகிறார். (பார்த்தாலே தெரிகிறது).




படத்தை பற்றிய சில விபரங்கள்:

நடித்தவர்கள் : விக்ரம், தீக்சா சேத், கே.விஸ்வநாத், ஸ்ரேயா,ரீமாசென்
இயக்கம்          :  சுசீந்திரன்
இசை                 :  யுவன் சங்கர் ராஜா
பாடல்கள்        :  யுகபாரதி





பாடல்கள்:

1) பொடி பையன் போலவே  -  ஹரிசரண்
         (யுவன் படத்தில் தவறாமல் இடம் பெறும் காதல் வயப்பட்ட ஹீரோ
          பாடும்  பாடல்)

2) வில்லாதி வில்லன்             -  மனோ, மாலதி
          (வில்லன் கூடாரத்தில் ஹீரோ மாறு வேடத்தில் பாடும் 80 களின்
            கிளைமாக்ஸை ஞாபகப்படுத்துகிறது, காரணம் மனோவா?)

3) பனியே, பனிப்பூவே             -  ஜாவித் அலி, ரேணுகா
         ( வழக்கமான யுவன் ஸ்வீட் மெலடி)

4) லட்டு,லட்டு 2 லட்டு             -  விக்ரம், சுசீத்ரா,பிரியதிர்ஷனி
         (ஸ்ரேயா,ரீமா சென்,விக்ரம் கூட்டணி பாடல்.  வருது, வருது (தூங்காதே
           தம்பி, தூங்காதே) போல பல பாடல் லேசாக ஞாபகம் வருவதை
           தவிர்க்க முடியவில்லை.)





ரஜினி குடும்ப பாடலான 'Why This கொலவெறி' யை தாண்டி கேட்காது.
ஆனால் அதையும் தாண்டி நிற்கும்.


மீண்டும் சந்திப்போம்.




05 December, 2011

Type ஆன ஓவியங்கள்

                                                                                       ஓவியம் வரைவது என்பது ஒரு
அரிய கலை. என்ன தான் முட்டி மோதி பழகினாலும் இயல்பாய் வரையும்
ஒவியர்களிடம் உள்ள நேர்த்தி போல் நிச்சயம் வராது.ஆனால் இதெல்லாம்
அவ்வை வாக்கின்படி அரிதிலும்,அரிதாக ஆரோக்யமாய் பிறந்தவர்களுக்கு மட்டுமே. மாற்றுத்திறனாளிகளின் அன்றாட வாழ்வே ஒரு போராட்டமாய்
இருக்கும் போது அவர்களிடமிருந்து வெளிப்படும் படைப்புத்திறன் என்பது
அதிசயப்படவேண்டியது மட்டுமல்ல, போற்றிப் பாதுகாக்க வேண்டிய ஒன்று
ஆகும். ஏனெனில் அந்த படைப்பில் தெரிவது படைப்பாளியின் திறமை மட்டும்
அல்ல, அவர்களின் அளவிடமுடியாத விடாமுயற்சி. மேலும் அவர்களைப்
போல் உள்ளவர்களுக்கு அவர்கள் கொடுக்கும் Practical ஊக்கம்.







                                         


                      






                                                                                மேலே உள்ள படங்கள் அழகாக
வரையப்பட்டுள்ளது என்பதில் யாருக்கும் எந்த சந்தேகமும் இருக்காது.
ஆனால் ஒரு சின்ன திருத்தம், அவை வரையப்பட்ட ஓவியங்கள் இல்லை.
அடிக்கப்பட்ட ஓவியங்கள் -  டைப் ரைட்டரில். Type writer ல் நாம் தப்பில்லாமல்
டைப் செய்வதையே உலக சாதனையாக நினைத்துக்கொண்டிருக்கும் போது
ஒருவர் அதில் படமே வரைந்திருக்கிறார் என்பது எவ்வளவு பெரிய விஷயம்
பாருங்கள். இதைவிட அதிசயம் அவர் Celebral palsy என்னும் நோயால் பாதிக்கப்
பட்டவர். முடக்குவாதம் என்று சொன்னால் எளிதில் விளங்கும். இந்நோய்
பாதிக்கப்பட்டவர்களுக்கு அன்றாட செயல்களே மலையேற்றம் போல்
கடினமான விஷயங்கள். ஒரு பொருளை கையில் எடுக்ககூட நிறைய மெனக்
கெடவேண்டும். சட்டைக்கு பட்டன் போடுவது கூட கஷ்டம். அப்படிப்பட்ட
கடினமான நோயால் பிறப்பிலேயே பாதிக்கப்பட்ட Paul Smith (1921 - 2007) என்னும் 
Philadelphia ல் பிறந்தவர் டைப்ரைட்டரில் வரைந்த ஓவியங்கள் தான் அவை.
11வது வயதில் இருந்து வரைய ஆரம்பித்த அவர் சில படங்களை வரைய
வாரக்கணக்கில் கூட ஆகியிருக்கிறது.  இதற்கு அவர் பெரும்பாலும் பயன்படுத்திய Keys ...  @ # $ % ^  &  *   (  ) _  



அவர் வரைந்த மேலும் சில படங்கள்


















அவரைப்பற்றிய சிறு ஆவணப்படம்






              விடாமுயற்சியும், கடின உழைப்புக்கும் சாட்சி தான் இந்த படங்கள்




மீண்டும் சந்திப்போம்.

26 November, 2011

ஜம்மென்று ஒரு ஜெம் போன்

                                                                             நோக்கியா போன் நிறுவனத்தினர்
சமீபத்தில் ஒரு புதிய மாடல் போனுக்கான Concept ஐ வெளியிட்டுள்ளனர்.
இப்போதைக்கு வெறும் அனிமேஷன் வீடியோவை மட்டும் வெளியிட்டு
உள்ளனர். அதே போல் போன் செய்து வெளியிட  எத்தனை வருடங்கள்
ஆகும் என்று தெரியவில்லை. அதற்குள் சீனா வெளியிடாமல் இருந்தால்
நோக்கியாவிற்கு சந்தோசம் தான்.




           
                                                                             கிராபிக்ஸ்  தானே என்று இஷ்டத்துக்கு
டிசைன் செய்தது போல் ஆப்சன்ஸை அள்ளி வீசி இருக்கிறார்கள்.

  •  முன்பக்கம், பின்பக்கம் என்று எல்லா பக்கமும் Display
  •   எல்லா சைடும் Touch Screen
  •   வட்டம் போட்டா கேமரா வருது.
  •   நாம் ஒரு பக்கம் பேசிக்கொண்டு இருக்கும் போது மறு பக்கம் விளம்பரம்    ஒடுமாம். ( பில்லில் அதற்கு ஏற்ற படி Discount கிடைக்குமாம். எப்படி!!)
 



அவர்கள் வெளியிட்டுள்ள வீடியோவை பார்த்தால் புரியும்.






 இதிலென்ன சந்தேகம்னா?

      எல்லா பக்கமும் Touch Screen ஆ இருந்துச்சுன்னா நாம கையில எடுக்கும் 
      போதே ஏதாவது ஒரு ஆப்சன் செலக்ட் ஆகி விடுமே!

      போனை எந்த பக்கம் கீழே வைத்தாலும் Scratch ஆகும் வாய்ப்பு உள்ளதே!

      பேட்டரி எத்தனை மணி நேரம் தாக்கு பிடிக்கும்.

      ரேட் பற்றி நமக்கு கவலையில்லை. ( வாங்கினா தானே! )


எது எப்படியோ,  புதிய டெக்னாலஜியை வேடிக்கை பார்க்கலாம்.



மீண்டும் சந்திப்போம்.

    


24 November, 2011

மீடியாவிற்கு மணி கட்ட பார்க்கும் மார்க்கண்டேயர்

                                                                                   தற்போதைய பிரஸ் கவுன்சில்
தலைவரும், முன்னால் நீதிபதியுமான மார்க்கண்டேய கட்ஜூ சமீபத்தில்
CNN கரண் தப்பாருக்கு அளித்த பேட்டியில் இந்தியாவில் மீடியா மிகவும்
மோசமாக செயல்படுவதாக குற்றம் சாட்டியுள்ளார்.  மீடியா என்று அவர்
குறிப்பிடுவது டி.வி. மற்றும் பத்திரிக்கைகள்.
( பிளாக் எந்த வகையில் சேரும்?).




                                                                           முன்பெல்லாம் டி.வி. என்பது அரசிடம்
மட்டும் தான் இருந்தது. பத்திரிக்கைகளும் இந்தியாவில் மொத்தம் எத்தனை என்று  எளிதில் எண்ணி விடலாம். ஆனால் இப்பொழுது ஜாதிக்கொரு கட்சி,
கட்சிக்கொரு டி.வி. என்ற நிலைமையில் தான் விஷுவல் மீடியா உள்ளது. 
பத்திரிக்கைகள், ஒன்று கட்சிகள் நடத்துகின்றன அல்லது கட்சிகள் தயவில்
நடக்கின்றன. எனவே செய்திகளில் நியாயம், தர்மம் எல்லாம் எதிர்பார்ப்பது
அநியாயம்,அதர்மம். எந்த மீடியா யாரை சேர்ந்தது என்ற கண்ணோட்டத்தில்
செய்தியை பார்ப்பது / படிப்பது ஒரு வேளை பலன் தரலாம்.





                                                                            ஆனால் ஜனநாயகத்தின் மூன்றாவது
தூண் என்று அழைக்கப்படும் மீடியாவை தாக்குவது என்பது யாராலும் எளிதில்
செய்யக்கூடிய காரியம் இல்லை. மறு நாளே அவர் வில்லன் போல் சித்தரிக்கப்
படும் அபாயம் உள்ளது. ஆனால் பிரஸ் கவுன்சில் தலைவராக இருக்கிறோம்
என்ற எண்ணத்தில் திரியை பற்ற வைத்துள்ளார் மார்க்கண்டேய கட்ஜூ.
அதாவது பூனைக்கு மணி கட்ட பார்க்கிறார். அதற்கு வந்த நாடு தழுவிய
எதிர்ப்பிற்கு பிறகும் தன் கருத்தில் இருந்து விலகாமல் தனது விளக்கத்தை
வெளியிட்டுள்ளார். பலன் கிடைக்குமா பார்ப்போம்.







அவர் அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ள சில விஷயங்கள்:


                        " மீடியா பொறுப்பில்லாமல் செயல்படுகிறது "

                        " மீடியா பற்றி நல்ல அபிப்ராயம் இல்லை "

                        "மீடியா மக்கள் நலனுக்காக பணியாற்றவில்லை, சில
                          நேரங்களில் மக்கள் நலனுக்கு எதிராக செயல்படுகின்றன"

                        " சினிமா நட்சத்திரங்கள், அழகிப்போட்டி, கிரிக்கெட் தான் 
                           நாட்டுக்கு அத்தியாவசமான விஷயங்கள் என்பது போன்ற
                           மாயையை உருவாக்குகின்றன."

                         " பெரும்பாலான பத்திரிக்கையாளர்கள் அரைகுறையாக தான்
                           இருக்கிறார்கள். எகானமிக் தியர்,  பிலாஸபி,  லிட்ரேச்சர்,
                           பொலிட்டிகல் சயின்ஸ் போன்ற விஷயங்களில் ஆழ்ந்த 
                           அறிவு இல்லை."

                          " செய்திகளை உண்மை நிலை அறியாமல் வெளியிடுகிறது"

                           " ஜோசியம், ராசி போன்ற மூட நம்பிக்கையூட்டும்  விஷயங்கள்
                             தான் அதிகளவில் இடம் பெறுகின்றன."


இதறகான தீர்வாக அவர் கூறும் விஷயங்கள்:

                              " டி.வி. சேனல்களையையும்  பிரஸ் கவுன்சில் கீழ் கொண்டு 
                                வர வேண்டும்."

                               " சொல்லித் திருந்தாத மீடியா நிறுவனத்திற்கு அரசு  
                                 விளம்பரத்தை  நிறுத்துவது, லைசன்சை குறிப்பிட்ட
                                 காலத்திற்கு முடக்கி வைப்பது போன்ற அதிகாரம் 
                                 பிரஸ் கவுன்சிலுக்கு வேண்டும். "

                               " தப்பு செய்தால் தண்டனை நிச்சயம் என்ற பயம் இருக்க
                                 வேண்டும்."

இது பத்திரிக்கை சுதந்திரத்தை பாதிக்கும் என்று எழுந்துள்ள விமர்சனத்திற்கு
அவர் கேட்டுள்ள கேள்வி :

                                " பிரதமர் என்றாலும் ஜன் லோக்பால் கீழ் வரவேண்டும் என்று
                                  சொல்பவர்கள் தங்களுக்கு என்றால் மட்டும் தயங்குவது ஏன்?"

                                " சுய கட்டுப்பாடு என்று சொல்வது எல்லாம் சும்மா!"




மேலே குறிப்பிட்டது எல்லாம் அவரின் கருத்துக்கள்.இது எல்லாம்
நடைமுறைக்கு ஒத்து வராது என்பது மட்டுமில்லாமல், இப்பொழுது
உள்ள அரசியல்வாதிகள் கையில் மீடியாவின் பிடியும் போய்விட்டால்
இந்தியா நாறிவிடும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.ஆனால்,
இப்பொழுது வரும் பத்திரிக்கைகளைப் படித்தால் அவர் சொல்வது
நூற்றுக்கு நூறு நிஜம் என்பதை உணரலாம். மீடியாக்கள் விழித்துக்
கொள்ள வேண்டிய நேரமிது. இந்த நிலைமை தொடரும் பட்சத்தில்
நிச்சயம் மக்களே இந்த பூனைக்கு மணியை கட்டி விடும் சூழ்நிலை
உருவாகிவிடும்.



மீண்டும் சந்திப்போம்.


23 November, 2011

கட்டி வைத்து அடிப்போம்.

                                                        இத நான் சொல்லவில்லை. இந்தியாவின்
காந்தியவாதிகளில் முக்கியமானவரும், மூத்த அஹிம்சாவாதியான
அன்னா ஹசாரே தான்  சொல்லியுள்ளார்.    முன்பெல்லாம்  எங்கள்
கிராமத்தில் தண்ணியடிப்பவர்களுக்கு முதல்  ரவுண்டில்  அறிவுரை
கூறுவோம்.அடுத்த ரவுண்டில் கோவிலில் வைத்து சத்தியம் வாங்கி
விடுவோம். அப்படியும் கேட்காதவர்களை மரத்தில் கட்டி வைத்து
அடிப்போம் என்று கூறியுள்ளார்.




                                           இதற்கு வழக்கம் போல் நம்மூர் அரசியல்வாதிகள்
பொங்கியுள்ளார்கள். தலிபான்கள் முறை போல் உள்ளது என்று ஒரு காங்கிரஸ்காரர் புலம்பியுள்ளார். பி.ஜே.பி. தலைவர்களும் இந்த விஷயம்
நகைப்புக்குரியது என்று கூறியுள்ளார்கள்.


                                              அது சரி, அவ்வளவு பேரையும் கட்டி வைத்து அடிக்க
வேண்டும் என்றால் மரத்திற்கு எங்கே போவது. நம்மூரில் மரத்தை விட
குடிகாரர்கள் தானே அதிகம். தேமே! என்று இருந்தவரை இந்தியன் தாத்தா
என்று உசுப்பி விட்டு அவர் பாருங்க இப்ப அடிதடின்னு கிளம்பிட்டாரு.
நியாயமா மக்களே?






                                                              அப்புறம், இன்னொருவரை நம்பி விட்ட இணையதளத்தில் அவர் இஷ்டத்துக்கு செய்தி வெளியிட்டதாக வந்த
புகாரை அடுத்து அன்னா ஹசாரே தானே நேரடியாக இறங்கிவிட்டார்.
அவரின் இணையதளம்.



                                      http://news.indiaagainstcorruption.org/annahazaresays/




மீண்டும் சந்திப்போம்.


21 November, 2011

பரவசமூட்டும் படங்கள்

                                                                           எந்த அசைவும் இல்லாத போட்டோ
மற்றும் அசைவை அடிப்படையாக கொண்ட வீடியோக்கள் நிறைய
இருந்தாலும் இந்த இரண்டுக்கும் இடையில் புகுந்து விளையாடும் சின்ன சின்ன அசைவுகள் கொண்ட GIF படங்கள் நிச்சயம் ஒரு ஹைகூ தான்.
அந்த வகையில் என்னை கவர்ந்த சில படங்கள்.





                           இன்று பிறந்த நாள் கானும் 1,91,78,082 பேருக்கு வாழ்த்துக்கள்

                                                       (700 crore / 365 = 19 178 082.2)



  
                                        இனிமே சீக்கரமா வீட்டுக்கு வந்துருவேன்!




                                                    சீக்கிரமா கொடும்மா!  பசிக்குது.






                                ரொம்ப யோசிக்கிறாரே?  இன்னக்கி அம்பேல் தான்.






                                                         நேத்து இங்க தான இருந்துச்சு!






                                                               ஹைய்யா ஜாலி!





           

                                            பார்ரா, தண்ணியெல்லாம் வருது இந்த ஊர்ல!



மீண்டும் சந்திப்போம்.



17 November, 2011

ஆத்தி இது வாத்து கூட்டம்

                                                                  ஒரு வேலை விஷயமாக நண்பருடன்
நாமக்கல்லில் இருந்து கரூருக்கு  வந்து கொண்டிருக்கும் போது கிட்டத்தட்ட
கரூரின் அருகில் சுமார் 10 கி.மீ. இருக்கும்போது ரோட்டின் இருபுறமும் "இங்கு
வாத்து கறி கிடைக்கும்" என்ற போர்டு நிறைய தென்பட்டது. நன்பர் இந்த இடத்தில் வாத்து கறி ரொம்ப பேமஸ் என்றபடியே  ஒரு கீத்து கொட்டகை முன்பு வண்டியை நிறுத்தினார். ரொம்ப நல்லவங்க! அவங்களுக்கே மனசு கேட்காம  ஒரு இடத்தில கூட ஹோட்டல் என்று எழுதி வைக்கவில்லை.





                                                              ரோட்டின் ஒரத்தில் நல்ல விசாலமான இடம்.
முழுக்க கீத்து வேயப்பட்டிருந்தது. வாசலின் இடதுபுறம் பட்டி போல் கட்டி
விட்டு நிறைய வாத்துக்களை மேய விட்டிருந்தார்கள். பார்க்கவே அழகாக
இருந்தது. வலதுபுறம் ஒரு பெண் வாத்தை நிர்வாணமாக்கி வறுத்து கொண்டு
இருந்தார்.


                                 இவங்க கூட நல்லா மேய்ப்பாங்க  -  வாத்தை


                               "கொன்றால் பாவம் தின்றால் போச்சு" என்ற பழமொழி கேட்க நல்லா இருந்தாலும், ஒரு பக்கம் கொன்று கொண்டே இருக்க, மறுபக்கம் தின்று கொண்டு இருக்க மனசு கேட்காததால், ====> உள்ளே போய் உட்கார்ந்து கொண்டோம் !. உள்ளே என்றவுடன் பெரிய பார்டிஷனை எல்லாம் எதிர்பார்க்க
வேண்டாம். தட்டி வைத்து அந்த இடத்தை நாலு பாகமாக பிரித்து இருந்தனர்.
முதல் பாகத்தில் சமையல் நடந்து கொண்டிருந்தது. நாங்கள் 3 வது பாகத்தில்
உட்கார்ந்து இருந்தோம். வாத்து கறியுடன் ! இட்லியும், புரோட்டாவும் கிடைக்கிறது. பொதுவாக தரம் தெரியாத உணவகங்களிலும், இடம் தெரியாத
ஊர்களிலும் சிக்கி கொண்டால் இட்லி தான் பெஸ்ட். சாம்பார் சூடாக இருந்தால்
(இட்லி சுமாராக இருந்தாலும்) எளிதில் உள்ளே தள்ளி விடலாம். Side Effect ம்
இட்லியில் பெரும்பாலும் வாய்ப்பில்லை.  ஆனால் என் உடம்பில் பாதி ரத்தமும், மீதி புரோட்டாவும் ஓடுவதால் எந்த ஊர் புரோட்டாவும் என் உடம்பில்
எளிதில் ஒட்டிக்கொள்ளும் என்ற அதீத நம்பிக்கையில் நான் வழக்கம் போல் புரோட்டாவையே ஆர்டர் செய்தேன்.





          மது அருந்த அனுமதியில்லை என போர்டு போட்டிருந்தாலும்.
                                                                                                                     தாலும்,
                                                                                                                           லும்,
                                                                                                                                 ம்,
                                                                                                                                  ம்..ம்..


                                                             நான் சென்ற வேலை முடியாத காரணத்தால்
நான் புரோட்டாவும், வாத்தும் மட்டுமே சாப்பிட்டேன், கண்ணீருடன்.

                                                         கண்ணீருக்கு காரணம் காரம்.

                                                            ஒவ்வொரு டேபிளிலும் தண்ணீர் டம்ள்ரில்
வைக்காமல் செம்பில் வைக்கும் போதே டவுட்டு.  (கரூரில் குடம், குடமாக தண்ணீர் குடித்தாலும் தாகம் அடங்காது,  சப்பென்று தான் இருக்கும்.)
அது மட்டுமில்லாம தொட்டு கொண்டு சாப்பிட வைத்த குழம்பை, பழக்க தோஷத்தில் புரோட்டாவை பிச்சுப் போட்டு பிணைந்து அடித்து விட்டேன். வாயில் வைத்தால் கண்ணீர் மழையாக பொழியுது. அதையும் மீறி Full கட்டு கட்டி விட்டேன்.  அவ்வளவு டேஸ்ட்.  எதிர்பார்க்கவே இல்லை. அந்த பக்கம்
போகும் வாய்ப்பு கிடைத்தால் சுற்றுப்புறம், சுகாதாரம் எல்லாம் ரொம்ப
பார்க்காமல் ஒரு தடவை உள்ளே போய் சாப்பிட்டு பாருங்கள். அந்த பகுதியில்
உள்ள எல்லா ஹோட்டலிலும் ஓரளவுக்கு இதே டேஸ்ட் தான் உள்ளதாக சொல்கிறார்கள்.



                  அப்புறம் , வாத்து கறி சாப்பிட்டால் சளி தொந்தரவுக்கு நல்லதென்று
சொன்னார்கள். ( விற்பவர்கள் )



மீண்டும் சந்திப்போம்.



LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...