இளையராஜாவின் ரசிகர்களுக்கு கொஞ்சம் லேட்டான பொங்கல் பரிசாக ஒரு வார இடைவெளியில் இரண்டு படங்களின் பாடல்கள் வெளியாகி உள்ளது. முதலில் கன்னட படமான பிரசாத்
உண்மையிலேயே காது கேட்காத, வாய் பேசாத சங்கல்ப் என்ற அழகான சிறுவன் மற்றும் நமது ஆக்சன் கிங் அர்ஜூன்,மாதுரி பட்டாச்சார்யா நடித்துள்ள இந்த படத்தை இளையராஜா,அர்ஜீன் என எல்லோரும் மன நிறைவை தந்த படம் என இசை வெளியீட்டு விழாவில் பாராட்ட, தயாரிப்பாளர் மட்டும் இது ஆர்ட்பிலிம் மட்டும் இல்ல! , நல்ல கமர்சியலும் இருக்கு என்றார்.(காசு போட்டிருக்கார்ல!)
பாடல்கள்:
மொத்தப்படத்தையும் தூக்கி நிறுத்துவது முதல் பாடல் நானு,நீனு தான். சூப்பராக இருக்கிறது. மூன்று தடவை இடம் பெறும் ஓ,நன்ன கந்தா பாடல் நன்றாக இருந்தாலும் காதல் ரோஜாவே படத்தில் இட்ம் பெற்ற 'மனம் போன போக்கில்' பாடலை நினைவுப்படுத்துகிறது. இளையராஜா மற்றும் பலர் பாடும் பாடல் - As Usual Raja. கடைசி பாடலை (We Are Ok) மனோ மூர்த்தி என்பவர் இசையமைத்திருக்கிறார்.(Nothing Special.). Re-recording ல் நிச்சயம் பட்டைய கிளப்பியிருப்பார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. கதையும், களமும் அமைந்து விட்டால் அங்கு ராஜாவின் ராஜாங்கம் தான்.
அடுத்து மயிலு.
பாடல்கள்:
1) நானு நீனு - மது பாலகிருஷ்ணன், ரீட்டா
2) ஓ, நன்ன கந்தா - கார்த்திக்
3) ஓ, நன்ன கந்தா (BIT) - பேபி ஹரிப்பிரியா, டீட்டா
4) ஓ, நன்ன கந்தா (BIT) - கார்த்திக்
5) ஒன்று அரமனே - இளையராஜா,அனிதா,ரீட்டா,சுர்முகி
6) We Are Ok - Sonu nigam chorus (இசை : மனோ மூர்த்தி)
மொத்தப்படத்தையும் தூக்கி நிறுத்துவது முதல் பாடல் நானு,நீனு தான். சூப்பராக இருக்கிறது. மூன்று தடவை இடம் பெறும் ஓ,நன்ன கந்தா பாடல் நன்றாக இருந்தாலும் காதல் ரோஜாவே படத்தில் இட்ம் பெற்ற 'மனம் போன போக்கில்' பாடலை நினைவுப்படுத்துகிறது. இளையராஜா மற்றும் பலர் பாடும் பாடல் - As Usual Raja. கடைசி பாடலை (We Are Ok) மனோ மூர்த்தி என்பவர் இசையமைத்திருக்கிறார்.(Nothing Special.). Re-recording ல் நிச்சயம் பட்டைய கிளப்பியிருப்பார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. கதையும், களமும் அமைந்து விட்டால் அங்கு ராஜாவின் ராஜாங்கம் தான்.
அடுத்து மயிலு.
16 வயதினிலே வந்த சமயத்தில் அதிகம் பேசப்பட்ட கேரக்டர். இன்று வரை பெயர் சொல்லிக்கொண்டிருக்கிறது. 16 வயதினிலே வந்த சூட்டோடு இரண்டாம் பாகம் மாதிரி மயிலு என்ற பெயரில் இளையராஜா இசையில் வந்திருந்தால் படம் சுமாராக இருந்திருந்தாலும் பாடல்களுக்காகவே சக்கை போடு போட்டிருக்கும். என்ன செய்ய கிட்டத்தட்ட 35 வருடங்கள் ஆகி விட்டது. காலமும், தமிழ் படங்களும் நிறைய மாறி விட்டது. இளையராஜா மட்டும் இன்னும் மாறவில்லை என மயிலு பாடல்கள் சொல்கிறது. பழைய பாடல்களை விரும்பி கேட்கும் என்னைப் போன்றோருக்கு இந்த படத்தின் பாடல்கள் ரொம்ப பிடித்து போய் விட்டாலும் எல்லோருக்கும் பிடிக்கும் என எதிர்பார்க்க முடியாது.
படத்தில் 6 பாடல்கள்:
படத்தில் 6 பாடல்கள்:
1) யாத்தே - ஸ்ரீராம் பார்த்தசாரதி, பவதாரனி
2) துக்கமென்ன - ஸ்ரீராம் பார்த்தசாரதி, ரீட்டா
இரண்டு பாடல்களும் பழைய ராஜாவே தான். நன்றாக இருக்கிறது.3) ஆத்தி சொக்க - ரீட்டா
4) கல்யாணமாம் கல்யாணம் - ரீட்டா, சின்னப்பொன்னு,டிப்பு
வழக்கமான இளையராஜா பாடல்கள்.5) என்ன குத்தம் - இளையராஜா, தர்ஷினி
காலம்காலமாக கேட்ட இளையராஜாவின் சோகப்பாடல்.6) நம்மளோட பாட்டு தாண்டா - கார்த்திக்,திப்பு,சைந்தவி கோரஸ்
பாடல் - இயக்குனர் ஜீவன். (எல்லா பாடல்களும் அவர் தான் எழுதியுள்ளார்) எங்க பாட்டு தான் நல்ல பாட்டு, மற்றவர்கள் பாட்டு எல்லாம் குப்பை என்ற ரீதியில் எழுதியுள்ளார். ஜீவன் போன்றோர் அடிக்கும் ஜால்ரா இளையராஜாவின் இசையை தான் பாதிக்கிறது என்பதை அவர் போன்றோர் ஏனோ உணருவதேயில்லை. இன்னும் பழைய வேகம், ஏனோ தானோ வரிகள் என்று இல்லாமல் கொஞ்சம் மெனக்கெட்டால் கூட நிறைய இசைப்புதையல் கிடைக்கும். செய்வாரா ராஜா?1980 களின் இசை ரசிகர்களுக்கு பிரசாத், மயில் இரண்டும் சர்க்கரைப் பொங்கல் தான்.
மீண்டும் சந்திப்போம்.
arumai nanbare
ReplyDeletehttp://www.ambuli3d.blogspot.com/