08 February, 2012

எங்க சட்டசபையைப் போல ஏது மச்சான்.

சமீபத்திய ஹாட்டாபிக் கர்நாடக சட்டசபையில் பிட்டு படம் பார்த்த அமைச்சர்கள் மேட்டர் தான். அதில் ஒருவர் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை இலாகா அமைச்சர். ( நல்லா மேம்படுத்திருவாரு). நம்ம நாட்டு அரசியல்வாதிகள் சட்டசபையில்  சண்டை போடாம  இருப்பதே அதிசயம். அதிலயும் நாட்டு பிரச்சனைகளைப் பற்றி பேசுவது ரொம்ப ரொம்ப அதிசயம். அந்த மாதிரி ஒரு வகுப்புவாத பிரச்சனையைப் பற்றி சட்டசபையில் விவாதம் நடந்து கொண்டிருந்த போது தான் லட்சுமன் சவடி மற்றும் சி.சி.பட்டில் என்ற இரண்டு அமைச்சர்களும் படா சீரியஸாக செல்போனில் பிட்டு படம் பார்த்துக் கொண்டிருந்ததை தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று வீடியோ எடுத்து வெளியிட்டிருக்கிறது.






இது சம்பந்தமான கேள்விக்கு பதிலளித்த லட்சுமன் சவடி பிரச்சனைக்குரிய உடுப்பி தீவுத்திருவிழா சம்பந்தப்பட்ட படத்தை தான் செல்போனில் பார்த்ததாக கூறியுள்ளார்.(அது ஒரு தனிக்கூத்து, Tourism த்தை வளர்க்கிறோம் என்ற பெயரில் குதாம் பார்ட்டிகளைக் கூப்பிட்டு குத்துப்பாட்டு ஆட விட்டிருக்கிறார்கள்.) மற்றொரு அமைச்சரான சி.சி.பட்டீல் வெளிநாட்டில் நடந்த ஒரு கற்பழிப்பு மற்றும் கொலை சம்பந்தப்பட்ட வீடியோவை பார்த்துக் கொண்டிருந்ததாக கூறியுள்ளார். மொத்தத்தில் ஓட்டுப்போட்டவங்களுக்கு நல்லா படம் காட்டுறாங்க!.



                                       
                              சர்ச்சைக்குரிய உடுப்பி தீவுத்திருவிழா ரேவ் நடனக்குழு



டிஸ்கி நீதி :

1) தப்பு செய்யக்கூடாது.

2) செஞ்சாலும் மாட்டக்கூடாது.

3) மாட்டினாலும் ஆளாளுக்கு மாத்தி, மாத்தி பேசக்கூடாது.


மீண்டும் சந்திப்போம்.



2 comments:

  1. தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள்
    எப்படிப் பேசினாலும் ஏற்றுக் கொள்ளுபவர்கள் இருக்கும் வரை என்ன வேண்டுமானாலும் செய்வார்கள் - என்ன சொல்ல முடியும்...

    ReplyDelete
  2. @அப்பு
    சரியாக சொன்னீர்கள்!

    ReplyDelete

என்னை திட்டவும், தீட்டவும் கருத்திடுக

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...