24 November, 2011

மீடியாவிற்கு மணி கட்ட பார்க்கும் மார்க்கண்டேயர்

                                                                                   தற்போதைய பிரஸ் கவுன்சில்
தலைவரும், முன்னால் நீதிபதியுமான மார்க்கண்டேய கட்ஜூ சமீபத்தில்
CNN கரண் தப்பாருக்கு அளித்த பேட்டியில் இந்தியாவில் மீடியா மிகவும்
மோசமாக செயல்படுவதாக குற்றம் சாட்டியுள்ளார்.  மீடியா என்று அவர்
குறிப்பிடுவது டி.வி. மற்றும் பத்திரிக்கைகள்.
( பிளாக் எந்த வகையில் சேரும்?).




                                                                           முன்பெல்லாம் டி.வி. என்பது அரசிடம்
மட்டும் தான் இருந்தது. பத்திரிக்கைகளும் இந்தியாவில் மொத்தம் எத்தனை என்று  எளிதில் எண்ணி விடலாம். ஆனால் இப்பொழுது ஜாதிக்கொரு கட்சி,
கட்சிக்கொரு டி.வி. என்ற நிலைமையில் தான் விஷுவல் மீடியா உள்ளது. 
பத்திரிக்கைகள், ஒன்று கட்சிகள் நடத்துகின்றன அல்லது கட்சிகள் தயவில்
நடக்கின்றன. எனவே செய்திகளில் நியாயம், தர்மம் எல்லாம் எதிர்பார்ப்பது
அநியாயம்,அதர்மம். எந்த மீடியா யாரை சேர்ந்தது என்ற கண்ணோட்டத்தில்
செய்தியை பார்ப்பது / படிப்பது ஒரு வேளை பலன் தரலாம்.





                                                                            ஆனால் ஜனநாயகத்தின் மூன்றாவது
தூண் என்று அழைக்கப்படும் மீடியாவை தாக்குவது என்பது யாராலும் எளிதில்
செய்யக்கூடிய காரியம் இல்லை. மறு நாளே அவர் வில்லன் போல் சித்தரிக்கப்
படும் அபாயம் உள்ளது. ஆனால் பிரஸ் கவுன்சில் தலைவராக இருக்கிறோம்
என்ற எண்ணத்தில் திரியை பற்ற வைத்துள்ளார் மார்க்கண்டேய கட்ஜூ.
அதாவது பூனைக்கு மணி கட்ட பார்க்கிறார். அதற்கு வந்த நாடு தழுவிய
எதிர்ப்பிற்கு பிறகும் தன் கருத்தில் இருந்து விலகாமல் தனது விளக்கத்தை
வெளியிட்டுள்ளார். பலன் கிடைக்குமா பார்ப்போம்.







அவர் அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ள சில விஷயங்கள்:


                        " மீடியா பொறுப்பில்லாமல் செயல்படுகிறது "

                        " மீடியா பற்றி நல்ல அபிப்ராயம் இல்லை "

                        "மீடியா மக்கள் நலனுக்காக பணியாற்றவில்லை, சில
                          நேரங்களில் மக்கள் நலனுக்கு எதிராக செயல்படுகின்றன"

                        " சினிமா நட்சத்திரங்கள், அழகிப்போட்டி, கிரிக்கெட் தான் 
                           நாட்டுக்கு அத்தியாவசமான விஷயங்கள் என்பது போன்ற
                           மாயையை உருவாக்குகின்றன."

                         " பெரும்பாலான பத்திரிக்கையாளர்கள் அரைகுறையாக தான்
                           இருக்கிறார்கள். எகானமிக் தியர்,  பிலாஸபி,  லிட்ரேச்சர்,
                           பொலிட்டிகல் சயின்ஸ் போன்ற விஷயங்களில் ஆழ்ந்த 
                           அறிவு இல்லை."

                          " செய்திகளை உண்மை நிலை அறியாமல் வெளியிடுகிறது"

                           " ஜோசியம், ராசி போன்ற மூட நம்பிக்கையூட்டும்  விஷயங்கள்
                             தான் அதிகளவில் இடம் பெறுகின்றன."


இதறகான தீர்வாக அவர் கூறும் விஷயங்கள்:

                              " டி.வி. சேனல்களையையும்  பிரஸ் கவுன்சில் கீழ் கொண்டு 
                                வர வேண்டும்."

                               " சொல்லித் திருந்தாத மீடியா நிறுவனத்திற்கு அரசு  
                                 விளம்பரத்தை  நிறுத்துவது, லைசன்சை குறிப்பிட்ட
                                 காலத்திற்கு முடக்கி வைப்பது போன்ற அதிகாரம் 
                                 பிரஸ் கவுன்சிலுக்கு வேண்டும். "

                               " தப்பு செய்தால் தண்டனை நிச்சயம் என்ற பயம் இருக்க
                                 வேண்டும்."

இது பத்திரிக்கை சுதந்திரத்தை பாதிக்கும் என்று எழுந்துள்ள விமர்சனத்திற்கு
அவர் கேட்டுள்ள கேள்வி :

                                " பிரதமர் என்றாலும் ஜன் லோக்பால் கீழ் வரவேண்டும் என்று
                                  சொல்பவர்கள் தங்களுக்கு என்றால் மட்டும் தயங்குவது ஏன்?"

                                " சுய கட்டுப்பாடு என்று சொல்வது எல்லாம் சும்மா!"




மேலே குறிப்பிட்டது எல்லாம் அவரின் கருத்துக்கள்.இது எல்லாம்
நடைமுறைக்கு ஒத்து வராது என்பது மட்டுமில்லாமல், இப்பொழுது
உள்ள அரசியல்வாதிகள் கையில் மீடியாவின் பிடியும் போய்விட்டால்
இந்தியா நாறிவிடும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.ஆனால்,
இப்பொழுது வரும் பத்திரிக்கைகளைப் படித்தால் அவர் சொல்வது
நூற்றுக்கு நூறு நிஜம் என்பதை உணரலாம். மீடியாக்கள் விழித்துக்
கொள்ள வேண்டிய நேரமிது. இந்த நிலைமை தொடரும் பட்சத்தில்
நிச்சயம் மக்களே இந்த பூனைக்கு மணியை கட்டி விடும் சூழ்நிலை
உருவாகிவிடும்.



மீண்டும் சந்திப்போம்.


8 comments:

  1. சரியான கருத்துக்களையே அவர் கூறியுள்ளார். ஆனால் மீடியா மாறுவது என்பது கடினம் தான். பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  2. //இப்பொழுது வரும் பத்திரிக்கைகளைப் படித்தால் அவர் சொல்வது
    நூற்றுக்கு நூறு நிஜம் என்பதை உணரலாம்.
    //
    ஆமாம்
    அன்புடன் :
    ராஜா

    அடுத்தவர் மொபைல் நம்பரில் நீங்கள் SMS அனுப்பலாம்

    ReplyDelete
  3. அவர் ஒருவேளை சன் டிவி , ஜெயா டிவி பார்த்திருபரோ ?

    ReplyDelete
  4. @Abdul Basith
    வருகைக்கும்,பகிர்வுக்கும் நன்றி

    ReplyDelete
  5. @"என் ராஜபாட்டை"- ராஜா
    வருகைக்கும்,பகிர்வுக்கும் நன்றி

    ReplyDelete
  6. @MANASAALI
    வருகைக்கும் பகிர்வுக்கும் நன்றி!

    ReplyDelete
  7. அருமையானா கருதுக்கள் உங்கள் பக்க கருதுக்கள் பிரமாதம்

    ReplyDelete

என்னை திட்டவும், தீட்டவும் கருத்திடுக

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...