Showing posts with label ilayaraja. Show all posts
Showing posts with label ilayaraja. Show all posts

21 July, 2014

என்னைத்தேடி வந்து கொஞ்சுகின்ற இசையே


இளையராஜா இசையில் சமீபத்தில் பாடல்கள் வெளியாகி உள்ள  போர்க்களத்தில் ஒரு பூ படத்தில் எனக்கு பிடித்த பாடல்.





என்னைத் தேடி வந்து கொஞ்சுகின்ற இசையே
கைம்மாறு என்ன நான் உனக்கு தருவேன்.
பாடலை கேட்க ...






மற்ற பாடல்கள் பெரிதாக Impress செய்யவில்லை என்றாலும் இந்த ஒரு பாடல் 
மிக திருப்தியாக இருக்கிறது. ஏன் இளையராஜா ஒவ்வொரு மூடுக்கும் இதுதான்  Pattern, இவர் தான் Singer என்று வரையறை வகுத்துக் கொண்டு இசை அமைக்கிறார் என்று புரியவில்லை.

மீண்டும் சந்திப்போம்.


03 June, 2012

இளையராஜா இசையில் ஹலோ ஜெய்ஹிந்த் பாடல்கள்

இசைஞானி இளையராஜா இசையில் ஏகப்பட்ட எதிர்பார்ப்புடன் ஆரம்பிக்கப்பட்ட  மராட்டி மொழி படமான  ஹலோ ஜெய்ஹிந்த் படத்தின் பாடல்கள் ஏனோ வெளிவந்த மாதிரியே தெரியவில்லை. 3 பாடல்கள் நன்றாக உள்ளன. மற்ற பாடல்களும் வழக்கமான இளையராஜா ரகம். இனிமேல் இளையராஜா படம் புக்காகும் போதே பாடல்கள் வெளியாக வேண்டும் என்று கண்டிசனோடு தான் கையெழுத்திட வேண்டும் என நினைக்கிறேன்.





பாடல்கள் பார்க்க :

பாடல் 1



பாடல் 2



பாடல் 3



பாடல் 4



பாடல் 5



பாடல் 6



தீம் மியூசிக்





மும்பை குண்டு வெடிப்பால் பாதிக்கப்பட்ட ஒரு போலிஸ்காரரின் கதை. மிகப்பெரிய பலமாக இளையராஜாவின் பிண்ணனி இசை உள்ளது. 





இன்று பிறந்தநாள் கொண்டாடும் இசை அரசருக்கு பிறந்தநாள்  வாழ்த்துக்கள்.



மீண்டும் சந்திப்போம்.


13 April, 2012

இளையராஜாவின் முதல்வர் மகாத்மா பாடல்கள்

இசைஞானி இளையராஜாவின் இசையில் சமீபத்தில் வெளியான (எங்கே ரிலீஸானது என்றே தெரியவில்லை) முதல்வர் மகாத்மா படத்தில் 7 பாடல்கள் இசையமைத்து உள்ளார். அதில் 6  Bit Songs. தனது கொள்கையில் சிறிதும் மனம் தளராத விக்கிரமாதித்தன் போல் தனது ஸ்டைலில் இம்மியளவும்  பிசகாமல் பாடல்களுக்கு இசையமைத்து உள்ளார். இளையராஜாவின் ரசிகர்களுக்கு OK! மற்றவர்களுக்கு இருக்கவே இருக்கிறது OK OK.




காமராஜ் என ஏற்கனவே ஒரு படத்தை எடுத்த A.பாலகிருஷ்ணன் தான் முதல்வர் மகாத்மா படத்தையும் எடுத்து உள்ளார். (இரண்டு படத்துக்கும் இசை இளையராஜா தான்.) சொர்க்கத்திற்கு சென்ற காந்தி தனது வேலை இன்னும் முடியவில்லை என இறைவனிடம் அஹிம்சா முறையில் போராடி இந்தியாவிற்கு (தமிழகத்திற்கு) வருவது போல் கதையாம். Documentary படம் போல் எடுத்திருப்பதாக சில விமர்சனங்கள். வழக்கம் போல் இளையராஜாவின் பிண்ணனி இசை பலம்.




21 January, 2012

இளையராஜாவின் புதிய படங்கள் மயிலு, பிரசாத்

இளையராஜாவின் ரசிகர்களுக்கு கொஞ்சம் லேட்டான பொங்கல் பரிசாக ஒரு வார இடைவெளியில் இரண்டு படங்களின் பாடல்கள் வெளியாகி உள்ளது. முதலில் கன்னட படமான பிரசாத்

உண்மையிலேயே காது கேட்காத, வாய் பேசாத சங்கல்ப் என்ற அழகான சிறுவன் மற்றும் நமது ஆக்சன் கிங் அர்ஜூன்,மாதுரி பட்டாச்சார்யா நடித்துள்ள இந்த படத்தை இளையராஜா,அர்ஜீன் என எல்லோரும் மன நிறைவை தந்த படம் என இசை வெளியீட்டு விழாவில்  பாராட்ட, தயாரிப்பாளர் மட்டும் இது ஆர்ட்பிலிம் மட்டும் இல்ல! , நல்ல கமர்சியலும் இருக்கு என்றார்.(காசு போட்டிருக்கார்ல!)





பாடல்கள்:

1) நானு நீனு                                -     மது பாலகிருஷ்ணன், ரீட்டா
2) ஓ, நன்ன கந்தா                     -     கார்த்திக்
3) ஓ, நன்ன கந்தா (BIT)           -     பேபி ஹரிப்பிரியா, டீட்டா
4) ஓ, நன்ன கந்தா (BIT)           -     கார்த்திக்
5) ஒன்று அரமனே                   -      இளையராஜா,அனிதா,ரீட்டா,சுர்முகி
6) We Are Ok                                 -      Sonu nigam chorus     (இசை :  மனோ மூர்த்தி)


மொத்தப்படத்தையும் தூக்கி நிறுத்துவது முதல் பாடல் நானு,நீனு தான். சூப்பராக இருக்கிறது. மூன்று தடவை இடம் பெறும் ஓ,நன்ன கந்தா பாடல் நன்றாக இருந்தாலும் காதல் ரோஜாவே படத்தில் இட்ம் பெற்ற 'மனம் போன போக்கில்' பாடலை நினைவுப்படுத்துகிறது. இளையராஜா மற்றும் பலர் பாடும் பாடல் - As Usual Raja. கடைசி பாடலை (We Are Ok) மனோ மூர்த்தி என்பவர் இசையமைத்திருக்கிறார்.(Nothing Special.).  Re-recording ல் நிச்சயம் பட்டைய கிளப்பியிருப்பார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. கதையும், களமும் அமைந்து விட்டால் அங்கு  ராஜாவின்  ராஜாங்கம்  தான்.


அடுத்து மயிலு.






16 வயதினிலே வந்த சமயத்தில் அதிகம் பேசப்பட்ட கேரக்டர். இன்று வரை பெயர் சொல்லிக்கொண்டிருக்கிறது. 16 வயதினிலே வந்த சூட்டோடு இரண்டாம் பாகம் மாதிரி மயிலு என்ற பெயரில் இளையராஜா இசையில் வந்திருந்தால் படம் சுமாராக இருந்திருந்தாலும் பாடல்களுக்காகவே சக்கை போடு போட்டிருக்கும். என்ன செய்ய கிட்டத்தட்ட 35 வருடங்கள் ஆகி விட்டது. காலமும், தமிழ் படங்களும் நிறைய மாறி விட்டது. இளையராஜா மட்டும் இன்னும் மாறவில்லை என மயிலு பாடல்கள் சொல்கிறது. பழைய பாடல்களை விரும்பி கேட்கும் என்னைப் போன்றோருக்கு இந்த படத்தின் பாடல்கள் ரொம்ப பிடித்து போய் விட்டாலும் எல்லோருக்கும் பிடிக்கும் என எதிர்பார்க்க முடியாது.

படத்தில் 6 பாடல்கள்:

1) யாத்தே                                        -           ஸ்ரீராம் பார்த்தசாரதி, பவதாரனி
2) துக்கமென்ன                              -           ஸ்ரீராம் பார்த்தசாரதி, ரீட்டா
இரண்டு பாடல்களும் பழைய ராஜாவே தான். நன்றாக இருக்கிறது.
3) ஆத்தி சொக்க                             -            ரீட்டா
4) கல்யாணமாம் கல்யாணம்   -            ரீட்டா, சின்னப்பொன்னு,டிப்பு
வழக்கமான இளையராஜா பாடல்கள்.
5) என்ன குத்தம்                               -             இளையராஜா, தர்ஷினி
காலம்காலமாக கேட்ட இளையராஜாவின் சோகப்பாடல்.
6) நம்மளோட பாட்டு தாண்டா  -             கார்த்திக்,திப்பு,சைந்தவி கோரஸ்
பாடல் - இயக்குனர் ஜீவன். (எல்லா பாடல்களும் அவர் தான் எழுதியுள்ளார்) எங்க பாட்டு தான் நல்ல பாட்டு, மற்றவர்கள் பாட்டு எல்லாம் குப்பை என்ற ரீதியில் எழுதியுள்ளார். ஜீவன் போன்றோர் அடிக்கும் ஜால்ரா இளையராஜாவின் இசையை தான் பாதிக்கிறது என்பதை அவர் போன்றோர் ஏனோ உணருவதேயில்லை. இன்னும் பழைய வேகம், ஏனோ தானோ வரிகள் என்று இல்லாமல் கொஞ்சம் மெனக்கெட்டால் கூட நிறைய இசைப்புதையல் கிடைக்கும். செய்வாரா ராஜா?

1980 களின் இசை ரசிகர்களுக்கு பிரசாத், மயில் இரண்டும் சர்க்கரைப் பொங்கல் தான்.

மீண்டும் சந்திப்போம்.


07 November, 2011

கமல் - படத்தில் இல்லாத பாடல்

                                                                          80 களில் படங்களுக்கு பூஜை போடும்
போது  எலுமிச்சை பழத்துடன், அப்பாவை கொன்றவனை பழி வாங்கும்  கதையையும்   எடுத்துக் கொண்டு தான் வருவார்கள். வெளி வரும் படத்தில்
பெரும்பாலான படங்கள் இதே கதையில் தான் வரும். ஆனால் அந்த கதையை
இப்படியும் எடுக்க முடியுமா? என்று வியக்கும்படி 1989ல் கமல் எடுத்திருந்தார்.



                                                         
                                                                            'அபூர்வ சகோதரர்கள்'   -   இந்த கதைக்கு
இது போதும் என எண்ணாமல் அந்த படத்திற்கு அவர் உழைத்த உழைப்பு தான்
அவரை இந்த உயரத்தில் வைத்திருக்கிறது. அப்பு கமலாக டெக்னாலஜி நிறைய
இல்லாத அந்த காலகட்டத்திலும் அற்புதமாக எடுத்திருந்தார். இசை,காமெடி,
சண்டை என எல்லாவற்றிலும் முழு திருப்தியுடன் வந்த அபூர்வ சகோதர்கள்
எனக்கு மிகவும் பிடித்த படங்களின் வரிசையில் சேர்ந்ததில் ஆச்சர்யம் ஒன்றும் இல்லை.


  

  ஆனால் படம் கிட்டத்தட்ட பாதி எடுத்து முடித்த நிலையில் அதில் திருப்திஅடையாத கமல் எடுத்த படத்தை அப்படியே பரணில் தூக்கி வைத்து விட்டு நிறைய மாற்றங்கள் செய்து புதுசாக எடுக்க ஆரம்பித்து விட்டார். 
நினைத்து பாருங்கள்!.  
எந்த தயாரிப்பாளருக்கு அப்படி ஒரு நினைப்பு வரும். ( அபூர்வ சகோதரர்கள் - ராஜ்கமல் புரொடக்சன்ஸ்).  கமல் செய்தார். ஏன் என்றால் கமல் தனது படங்களை அந்த அளவு காதலித்தார். 

     



                                                                    இளையராஜாவின் இசையில் கமல்
அபூர்வ சகோதரர்கள் படத்திற்காக முதலில் எடுத்த இந்த பாடலை பாருங்கள். எத்தனை  மாற்றங்கள். மனோரமாவிற்கு பதில்  காந்திமதி உள்ளார். ஜனகராஜ் மற்றும் சிவாஜி (காமெடியில் எங்கேயோ போயிட்டாங்க!) வேறு வேறு கெட்டப்பில் உள்ளனர். இந்த பாடலை இளையராஜா வேறு எந்த படத்திலும்
உபயோகப்படுத்தவும் இல்லை.






                                    

      
                                                       இன்று பிறந்தநாள் காணும்
                                                                         கமலுக்கு
                                          தமிழ் பட ரசிகர்கள் சார்பாக வாழ்த்துக்கள்.




மீண்டும் சந்திப்போம்.




21 October, 2011

ரிங் டோன்கள் Calling

                                                                               IPL நடந்த போது அடிக்கடி காட்டிய
விளம்பரங்களில் Projector Type Phone ம் ஒன்று. அந்த நேரத்தில் ஒரு நண்பருடன்
பஜார் பக்கம் போயிருந்த போது ஒரு கடையில் China model Projector type phone ஒன்று விற்பனைக்கு இருந்தது. தரம் பற்றி கேட்ட போது 'வித்தவரு பக்கத்தில தான நிக்கிறாரு, அவரு கிட்டேயே கேட்டுக்குங்க!' என்றார் கடைக்காரர். நண்பரிடம் எப்பங்க வாங்கினீங்க! ஏன் அதுக்குள்ள வித்துட்டீங்க என்று கேட்டதுக்கு. அத விடுங்க, அந்த மாடல் ஒன்னும் சரியில்ல என்று எப்பவும் சொல்லும் பதிலையே சொன்னார். வாரம் ஒரு மாடல் செல்போன் வைத்திருப்பவர்களை பார்த்தால்  ஆச்சர்யமாக தான் இருக்கு. புது மாடல் செல்போன் வாங்கி அடுத்த வாரமே மட்டமான விலைக்கு விற்பவர்களை பார்த்தால் என்ன சொல்வது என்றே தெரியவில்லை.




                                                                நான் ரொம்ப நாளா நோக்கியா 3310 மாடல்
போன் தான் வைத்திருந்தேன். நெட்வொர்க்கும், பேட்டரியும் ரொம்ப திருப்தி
ஆக இருந்தது. ஆனால் கால் வரும் போது கேட்ட ரிங்டோனை கேட்டு அருகில்
இருந்தவர்கள் கொலைவெறியோடு பார்த்ததாலும், பேருந்து பயணத்தில் பெரும்பாலான நேரங்களை செலவழிக்க வேண்டி இருந்ததால் பாடல்களை
கேட்பதற்காகவும் கேமரா மற்றும் மெமரி கார்டுடன் கூடிய செல்போனுக்கு
மாறினேன்.

                                                             முதன்முதலில் ஆசைஆசையாய் வைத்த
ரிங்டோன் தும்பி வா மலையாள பாடல். ரொம்ப நாளுக்கு அது தான்
வைத்திருந்தேன். பிறகு அவ்வப்போது ரிங்டோன் மாற்றிக்கொண்டே
வந்திருக்கிறேன். குறிப்பாக
சங்கீத மேகம் ,
பொத்தி வைச்ச ,
முத்துமணி,
ராதா,
ஒரு சிரி கண்டால் ,
ஹல்கே சே போலே 
போன்ற பாடல்கள் நிறைய இருந்தாலும் இளையராஜா தவிர்த்து
சாமுராய் ,
எனக்கென ,
செவ்வந்தி,
வேறென்ன ,
மற்றும் தவிர்க்க முடியாத
பச்சைக்கிளி முத்துச்சரம் பிட்
இப்போது
முன்னம் செய்த
மற்றும்
இவளொரு இளங்குருவி
பாடலும் ரிங்டோனாக உள்ளது. புது பாடல்களின் ரிங்டோன் வைப்பதில் உள்ள
பிரச்சனை பொது இடங்களில் அடிக்கடி கேட்க முடிவதால் நம் போனையும்
அவ்வப்போது கால் வந்திருக்கிறதா? என பார்க்க வேண்டியுள்ளது.

                                                              பாடல்களை கவிதை என்றால் ரிங்டோன்களை
ஹைகூ என்று தான் சொல்லவேண்டும். அதனால் இது தான் சிறந்த பாடல்கள்
என்றோ, சிறந்த ரிங்டோன் என்றோ எதுவும் சொல்லவில்லை. எனக்கு பிடித்து
இருந்தது, அவ்வளவு தான். இளையராஜா அடித்த பாடல்களின் BGM  மட்டும்
எடுத்தாலே ரிங்டோன்கள் ஏராளமாய் கொட்டும். ரிங்டோன்களுக்கு என்றே
அளவு எடுத்தது போல் சில பாடல்களின் குறிப்பிட்ட பகுதிகள் அமைகிறது.
ஹாரிஸ் ஜெயராஜின் பல பாடல்கள்  (உன்னாலே,உன்னாலே படம் வந்த
புதுதில் ஜூன் போனால் ஆரம்ப இசை பிட் கேட்காமல் வீட்டிற்கு வர முடியாது.
அந்தளவுக்கு பல பேரின் ரிங்டோனாக இருந்தது) , A.R.ரகுமான் (புது வெள்ளை
மழை),யுவன், அவ்வப்போது வரும் ஹிட் சாங்ஸ் என பட்டியல் நீளும். இதில்
நான் உபயோகித்த ரிங்டோன்ஸ்  பற்றி மட்டுமே கூறியுள்ளேன். அவ்வளவே!


மீண்டும் சந்திப்போம்.



29 September, 2011

இளையராஜாவின் வரலாற்றுச்சுவடுகள்

                                                                           இசைஞானி  இளையராஜாவின்
வாழ்வில் நடந்த பல சுவையான சம்பவங்களை தொகுத்து தினத்தந்தி
தனது வரலாற்றுச்சுவடுகள் பகுதியில் வெளியிட்டு வந்தது. அதன்
தொகுப்பு PDF பைலாக பல ஆண்டுகளாக நெட்டில் வலம் வந்து
கொண்டிருக்கிறது.  இது வரை படிககாதவர்கள் படியுங்கள். ஏற்கனவே
படித்தவர்கள் நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்.










மீண்டும் சந்திப்போம்

                                                                                 


 


20 September, 2011

இளையராஜாவின் சினேகாவீடு

                                                இளையராஜாவின் புது மலையாள படம்
சினேகாவி(வீ?)டு  பாடல்கள் வெளியாகியிருக்கிறது. மோகன்லாலின்
300வது படம் என சொல்லப்படுகிறது. இயக்கம் - சத்யன் அந்திக்காடு.



                                                                          பொதுவாக மலையாள படம் என்றால்
இளையராஜாவின் இசையும் நல்ல மெலடியாகவே இருக்கும். இந்த படத்தில்
வழக்கமான இளையராஜாவே தெரிகிறார். ஸ்ரேயாகோஷலின் 'ஆவணிதும்பி'
பாடல் கேட்க கேட்க இனிமை. 'சந்திரபிம்பத்தின்' (ராகுல் நம்பியார்,ஸ்வேதா)
ரசனையான டூயட்..


                                                         அப்பப்ப தமிழுக்கும் வாங்க ராஜா சார்.

மீண்டும் சந்திப்போம்.


28 August, 2011

இளையராஜா நடித்து வந்துள்ள புதிய விளம்பரம்

                                       இசைஞானியின் இசையில் வெளி
வந்துள்ள புதிய மலபார் கோல்டு விளம்பரம். இளையராஜா கம்போஸ்
செய்வது போல் எடுக்கப்பட்ட காட்சிகளுடன் பிரமிப்பான இசையுடன்
உள்ளது.





                                                                   சமீப காலமாக இளையராஜாவின் இசை
விட்டதை பிடிப்பது போல் உள்ளது. ஸ்ரீஇராமராஜ்யம் மற்றும் இந்த
விளம்பரம் அதை நிரூபிக்கிறது.   கேட்டு , பாருங்கள்.

மீண்டும் சந்திப்போம்


28 March, 2011

parvayil padatha padal 2

பார்வையில் படாத பாடல் 2

இந்த முறை அலைகள் ஒய்வதில்லை படத்தில்
இடம் பெற்ற புத்தம்புது காலை பாடலை பார்க்கலாம்.ஆயிரம் தாமரை
மொட்டுக்களே மற்றும் காதல் ஓவியம் பாடல்கள் அளவுக்கு இந்த பாடல்
ஹிட் ஆகாததிற்கு காரணம் படத்தில் இடம் பெறாததே.

இளையராஜாவிற்கு ஒரு பாடல் மிகவும் பிடித்து போய் விட்டால் மீண்டும் உபயோகம் செய்வார். 'சந்தத்தில் பாடாத
கவிதை' பாடலை கிட்டத்தட்ட 7 முறை பயன்படுத்தி உள்ளார்.இந்த
பாடலையும் அலைகள் ஓய்வதில்லை படத்தில் இடம் பெறாத காரணத்தினாலோ என்னமோ, மறுபடியும் ஆப்பிரிக்காவில் அப்பு என்ற
படத்தில் 'சின்னஞ்சிறு யானை' என்று இசையமைத்தார். அது படம்
வெளிவந்ததும் யாருக்கும் தெரியவில்லை, அந்த பாடலும் பெரிய அளவில் பேசபடவில்லை. இணையத்திலும் காணக்கிடைக்கவில்லை.

நீண்ட இடைவேளைக்கு பிறகு ஹிந்தியில் 'பா'
படத்திற்காக 'ஹல் கே சே போலே' (அப்படித்தானே!) என்று இசை
அமைத்தார். மிக நன்றாக வந்திருந்தது. எனினும் முதலில் வந்த 'புத்தம் புது காலை' பாடல் வரிகள்,குரல் கம்போசிங் என அனைத்திலும் சிறப்பாக
இருந்தது. அந்த பாடலை இயற்கை காட்சிகளுடன் சேர்த்து செய்த வீடியோவை காண






மீணடும் சந்திப்போம்.


18 March, 2011

அழகர்சாமியின் குதிரை இசை

                              அழகர்சாமியின் குதிரை இசை சமீபத்தில் வெளியிடப்பட்டது.
 ASK170311_177
தற்போது எல்லாம் இளையராஜாவின் இசையில் வரும் படங்களில் இளையராஜாவை தவிர மற்ற யார் பேரும் தெரிவதில்லை.
எந்த கணக்கில் படம் தேர்ந்தெடுக்கிறார் என்றே
தெரியவில்லை.  இந்த படத்தை பொருத்தவரை கவுதம்மேனன் தயாரிப்பில்,சுசீந்திரன் இயக்கத்தில் சிறு எதிர்பார்ப்புடன் வந்துள்ளது.
படத்தில் மூண்றே பாடல்கள். மீதியை Re-recording ல் பார்த்து கொள்ளலாம் என்று நினனத்து விட்டார் போலும்.  பாடல்கள் திருப்தியாக உள்ளது.

முதல் பாடல்
J.ஃப்ரான்சிஸ் கிருபா வரிகளில் இளையராஜா பாடியுள்ள ‘ குதிக்கிற குதிக்கிற’  பாடல்
Azhagar Samiyin Kuthirai Songs


அப்புக்குட்டி Hero  என்பதால் குரலிலும் நிறையவே மெனக்கட்டிருக்கிறார். கேட்க இனிமையாக உள்ளது.

இரண்டாவது பாடல்
சினேகன் வரிகளில் தஞ்சை செல்வி,சினேகன் மற்றும் ஒரு கும்பலே பாடியுள்ள பாடல்.
ASK170311_164
ஏற்கனவே கேட்ட பாடல் போலவே ஆரம்பிக்கும் இந்த பாடல் பல தாளங்களில் பயணித்து செல்கிறது. ஈசன் புகழ் தஞ்சை செல்வியின்
குரலில் உள்ள மெல்லிய சோகம் ‘ஜில்லா விட்டு’  பாடலுக்கு பலம் சேர்த்தது. ஆனால் இந்த பாடலுக்கு வித்தியாசத்தை மட்டுமே கொடுத்துள்ளது.

மூண்றாவது பாடல்
யுகபாரதியின் வரிகளில் கார்த்திக்,ஸ்ரேயா கோஸல் பாடியுள்ள பாடல்.
Azhagarsamiyin-Kuthirai-Tamil-Movie-Stills-10
இந்த படத்தில் மட்டும் அல்ல சமீபத்தில் வந்த பாடல்களில் மிக இனிமையான பாடல். இவ்வளவு நல்ல Melody யை கேட்டு ரொம்பவே நாட்களாகி விட்டது.  ஸ்ரேயா கோஸல் குரலின் உள்ள இனிமை பாடலுக்கு பலம்.  கார்த்திக் எந்த பாடலையும் கெடுக்காமல் பாடினாலும் மெருகேற்றுவதில்லை.
பல்லவியில் வரும் ”தீராததே ஆசை”  வரிகளை ஹரிஹரன் குரலில் கேட்டால் நிச்சயம் உருக்கியிருக்கும். மற்றபடி குறையென்றால்
பூ, காத்து, மான், மயில் என மெட்டை நிரப்பினால் போதும் என்ற அளவில் எழுதப்பட்ட பாடல் வரிகள்.

மொத்தத்தில் இனிமையான பாடல்கள்.

இனிமேலாவது நல்ல கதைகளம், இயக்குநர் உள்ள படங்களை தேர்ந்தெடுத்து இசை அமைத்தால் சரி.

தொடரட்டும் இசை ராஜாங்கம்.

மீண்டும் சந்திப்போம்.

06 February, 2011

பார்வையில் படாத பாடல்

                                                              சிறு வயதில் நாம்  ரசித்த பல விஷயங்கள் பின்னாளில் சிறு பிள்ளைதனமாக இருப்பதில் ஆச்சர்யம் ஒன்றும் இல்லை. சில விஷயங்கள் மட்டுமே அதில் விதி விலக்காக உள்ளது. இசையை போல. என்னை பொறுத்தவரை இளையராஜாவின் பழைய பாடல்கள் எப்பொழுது கேட்டாலும் கேட்க கேட்க ஈர்த்து கொண்டே தான் இருக்கிறது. 



                                        ஏனோ இளையராஜாவின் சில நல்ல பாடல்கள் படங்களில் இடம் பெறாமல் விட்டு போயிருக்கிறது. அப்படி பார்வையில் படாத பாடல்களில் முதலில் என்னை கவர்ந்தது நான் கடவுள் படத்திற்காக, அச்சாணி  படத்தின் 'மாதா உன் கோவிலிலே' பாட்டை ரீமிக்ஸ் செய்த 'அம்மா உன் பிள்ளை நான் ' பாடல். பாடும் போது எளிதில் உணர்ச்சி வசப்படாத ஜானகி அச்சாணி பாடல் பதிவின் போது கண் கலங்கியதாக படித்திருக்கிறேன். 

                                                   அவ்வளவு நல்ல பாடலை தேர்ந்தெடுத்து ரீமிக்ஸ் செய்ததற்காக ( படமாக்கா விட்டாலும்) பாலாவை பாராட்டியே ஆகவேண்டும். இந்த பாடல் தளபதி படத்தின் 'சின்ன தாய் அவள்'  பாடலுடன் மிக இயல்பாக ஒத்து போகிறது.

ரீமிக்ஸ் பாட்டிற்கு  ஒரு ரீமிக்ஸ் வீடியோ.

பாடலை காண 




மீண்டும் சந்திப்போம்.


LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...