28 March, 2011

parvayil padatha padal 2

பார்வையில் படாத பாடல் 2

இந்த முறை அலைகள் ஒய்வதில்லை படத்தில்
இடம் பெற்ற புத்தம்புது காலை பாடலை பார்க்கலாம்.ஆயிரம் தாமரை
மொட்டுக்களே மற்றும் காதல் ஓவியம் பாடல்கள் அளவுக்கு இந்த பாடல்
ஹிட் ஆகாததிற்கு காரணம் படத்தில் இடம் பெறாததே.

இளையராஜாவிற்கு ஒரு பாடல் மிகவும் பிடித்து போய் விட்டால் மீண்டும் உபயோகம் செய்வார். 'சந்தத்தில் பாடாத
கவிதை' பாடலை கிட்டத்தட்ட 7 முறை பயன்படுத்தி உள்ளார்.இந்த
பாடலையும் அலைகள் ஓய்வதில்லை படத்தில் இடம் பெறாத காரணத்தினாலோ என்னமோ, மறுபடியும் ஆப்பிரிக்காவில் அப்பு என்ற
படத்தில் 'சின்னஞ்சிறு யானை' என்று இசையமைத்தார். அது படம்
வெளிவந்ததும் யாருக்கும் தெரியவில்லை, அந்த பாடலும் பெரிய அளவில் பேசபடவில்லை. இணையத்திலும் காணக்கிடைக்கவில்லை.

நீண்ட இடைவேளைக்கு பிறகு ஹிந்தியில் 'பா'
படத்திற்காக 'ஹல் கே சே போலே' (அப்படித்தானே!) என்று இசை
அமைத்தார். மிக நன்றாக வந்திருந்தது. எனினும் முதலில் வந்த 'புத்தம் புது காலை' பாடல் வரிகள்,குரல் கம்போசிங் என அனைத்திலும் சிறப்பாக
இருந்தது. அந்த பாடலை இயற்கை காட்சிகளுடன் சேர்த்து செய்த வீடியோவை காண






மீணடும் சந்திப்போம்.


No comments:

Post a Comment

என்னை திட்டவும், தீட்டவும் கருத்திடுக

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...