17 December, 2012

மனைவியை பக்கத்தில வைச்சுக்கிட்டு படிக்காதீங்க!


மனைவி: என்ன பார்த்துகிட்டு இருக்கிங்க
கணவன்: ஒண்ணுமில்ல!
மனைவி: ஒண்ணுமில்லாமயா ஒரு மணிநேரமா மேரேஜ் சர்டிபிகேட்ட
                    பார்த்துகிட்டு இருக்கிங்க!
கணவன்: எங்கேயாவது எக்ஸ்பிரி டேட் போட்டுருக்கானு பார்க்கிறேன்.!!


                                              

மனைவி:- உங்களுக்கு ராணின்னு ஏற்கனவே ஒரு மனைவி இருக்கான்னு
                     கல்யாணத்துக்கு முன்பே ஏன் என்கிட்டே சொல்லலை..
கணவன்:- சொன்னேனே... மறந்துட்டியா...
மனைவி:- எப்போ சொன்னீங்க...நீங்க சொல்லவே இல்லை..
கணவன்:- உன்னை ராணி மாதிரி வச்சி காப்பாத்துவேன்னு நான் சொல்லலை..
மனைவி:-????????





மனைவி :- கருமம்... கருமம்.. பக்கத்து வீட்டுக்காரிக்கு ரெண்டு பேரோட
                       கள்ளத் தொடர்பு இருக்காம்.
கணவன் :- அப்படியா!  இன்னொருத்தன் யாருன்னு தெரியலையே?





பெண்: என்னை கல்யாணம் பண்ணிகிட்டா உங்களோட எல்லா துக்கத்துலயும்
              நான் பங்கெடுத்துகுவேன!
ஆண்: சந்தோசம், ஆனா எனக்கு ஒரு பிரச்சனையும் இப்ப இல்லையே!
பெண்: என்னை நீங்க இன்னும் கல்யாணம் பண்ணிக்கவே இல்லையே!





கணவன் : ஐயையோ! திடீரென நெஞ்சு வலிக்குதே..?
மனைவி : என்னங்க நீங்க! நம்ம வக்கீல் ஊர்ல இல்லாத நேரத்தில இப்படி
                     சொல்றீங்க..!



மீண்டும் சந்திப்போம் ....




12 December, 2012

12-12-12

1) ரஜினி,சினிமாதுறையில் உள்ள மூன்று பேர் முன் இன்றும் சிகரெட் பிடிக்கமாட்டார். 1.அவர் குரு கே.பாலசந்தர், 2. ஏ.வி.எம்.சரவணன், 3. எஸ்.பி.முத்துராமன்.


2) தான் நடித்ததிலேயே ரஜினிக்கு மிகவும் பிடித்த படம் மகேந்திரனின். 'முள்ளும் மலரும்'.


3) ரஜினி, அமிதாப்பின் 12 படங்களின் ரீமேக்கில் நடித்துள்ளார். இந்த ரீமேக் படங்கள் பெரும்பாலும் வெற்றிப் படங்கள்.






4) ஒவ்வொரு படத்திற்கான படப்பிடிப்பு ஆரம்பிக்கும் முன், ரஜினி திருப்பதிக்குச் சென்று பாலாஜியைத் தரிசித்த பின்னரே Shooting ஆரம்பிப்பது என்ற வழக்கத்தை இன்றும் பின்பற்றுகிறார்.


5) கண்டக்டர் ஆவதற்கு முன்னர், ரஜினி 'கன்னட சம்யுக்தா' என்ற தினசரியில், 3 நாட்கள் உதவி ஆசிரியராக வேலை செய்தார்.


6) தன் முதல் காரான பியட், முதல் ஸ்கூட்டர் லாம்பரெட்டா அனைத்தையும் இன்றும் பத்திரமாக பாதுகாத்து வைத்திருக்கிறார்.







7) இளையராஜாவை "சாமி" என்று தான் ரஜினி கூப்பிடுகிறார். ரமண மகரிஷியையும், திருவண்ணாமலையையும் ரஜினிக்கு அறிமுகப்படுத்தியது இளையராஜா தான். சினிமாவையும் தாண்டிய ஆழ்ந்த நட்பு இருவருக்கும் இடையே உண்டு.


8) ரஜினி இன்றளவும் சாதாரண நோக்கியா 3000 மாடல் போனையே பயன்படுத்தி வருகிறார்.


9) கடுமையாக, உயிரையே உறைய வைக்கும் அளவு ஜில்லிப்பான ருத்ரா பிரயாகில் மற்றவர்கள் தயங்கி நிற்கும் போது, தடாலென வெறும் துண்டுடன் உள்ளே குதித்து ஆனந்தமாய்க் குளிப்பது ரஜினியின் பொழுது போக்கு.







10) ரஜினியின் குசேலன் உருவப்படத்தை அமெரிக்காவின் M&M Candy Company (நம் ஊர் Gems போன்ற மிட்டாய்கள்) ஒவ்வொரு மிட்டாய் மேலும் பொறித்துள்ளது.


11) ரஜினிக்கு மிகப் பிடித்த உணவுப் பொருள்கள் அவித்த வேர்க்கடலையும் சிக்கன் கால்களும் தான்.


12)  ரஜினிக்கு மாறு வேடத்தில், தியேட்டருக்குச் சென்று அடுத்தவர் நடித்த படத்தைப் பார்ப்பதில் கொள்ளைப் பிரியம்.





"ரஜினி பேரக் கேட்டாலே... "    புத்தகத்திலிருந்து.



12-12-12 என்ற Special தினத்தில் பிறந்தநாள் கொண்டாடும் சூப்பர்ஸ்டார் ரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.




ஏற்கனவே ஒரு பதிவில் வெளியிட்ட தளபதி ரீமிக்ஸ் வீடியோ மறுபடியும்.





மீண்டும் சந்திப்போம்.



15 November, 2012

பெண்டு எடுக்கும் டெங்கு

தீபாவளிக்கு எல்லா விடுகளிலும் வெடி சத்தம் கேட்டதோ இல்லையோ கொசு அடிக்கும் பேட் சத்தம் நன்றாகவே கேட்டது. கரண்ட கட்  மற்றும் கொசு தொல்லை காரணமாக இரவு முழுவதும் தூக்கமில்லாமல் கிட்டத்தட்ட அரைமயக்க நிலையில் பகல் முழுவதும் மக்கள் நடமாடிக் கொண்டிருக்கின்றனர். இந்த அழகில் சிக்கன் குனியாவை விட பல மடங்கு பீதியை டெங்கு  கிளப்பிக் கொண்டிருக்கிறது.




குழந்தைகளை அதிகம் குறி வைக்கும் டெங்கு கொசுவின் தாக்கம் பயமுறுத்தும் வகையில் உள்ளது.
1) வாந்தி 
2)  மூட்டுகளில் வலி 
3) தலைவலி 
4) வாய், ஈறுகளில் ரத்தக்கசிவு 
5) காய்ச்சல் 
6) கண்ணில் வலி 

 போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரிடம் சென்று விடுவது உத்தமம். டெங்கு காய்ச்சல் வியாதிக்கு ஓரளவு பெரிய ஆஸ்பத்திரியில் நன்றாகவே சிகிச்சை தருகிறார்கள். இதற்கு தடுப்பு மருந்து சரியாக இல்லாத காரணத்தால் கொசுவை அண்ட விடாமல் வைத்துக் கொள்வதே புத்திசாலித்தனமாக கருதப்படுகிறது.



   


டெங்கு கொசு உரல், டயர் போன்று தண்ணீர் தேங்கும் இடங்களில் அதிகம் உற்பத்தியாகிறது. எனவே நமது வீடு மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் அதிகம் தண்ணிர் தேங்காமல் பார்த்துக் கொள்வது நமக்கு மட்டும் அல்லாமல் நம்மை சுற்றி இருப்பவர்களுக்கும் நல்லது. எல்லாவற்றிற்கும் அரசாங்கத்தையே குற்றம் சொல்லாமல் நாமும் முன்ஜாக்கிரதையுடன் இருப்பது நல்லது.
  

மீண்டும் சந்திப்போம்.


07 November, 2012

பேசும் படம்

'சிலை உயிர் பெற்று வந்தது போல 'என்று  வர்ணிப்பார்கள். அது போல் ஓவியம் என்றே சொல்லமுடியாத படி நிஜமான பெண்ணின் போட்டோ போல் உள்ள இந்த ஓவியங்களை வரைந்தவர் இளையராஜா. (இசைஞானி இளையராஜா இல்லை.)  அவரின் படங்கள் சில.




















இன்று பிறந்தநாள் காணும் கமல்ஹாசனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்







மீண்டும் சந்திப்போம்



LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...