12 December, 2012

12-12-12

1) ரஜினி,சினிமாதுறையில் உள்ள மூன்று பேர் முன் இன்றும் சிகரெட் பிடிக்கமாட்டார். 1.அவர் குரு கே.பாலசந்தர், 2. ஏ.வி.எம்.சரவணன், 3. எஸ்.பி.முத்துராமன்.


2) தான் நடித்ததிலேயே ரஜினிக்கு மிகவும் பிடித்த படம் மகேந்திரனின். 'முள்ளும் மலரும்'.


3) ரஜினி, அமிதாப்பின் 12 படங்களின் ரீமேக்கில் நடித்துள்ளார். இந்த ரீமேக் படங்கள் பெரும்பாலும் வெற்றிப் படங்கள்.






4) ஒவ்வொரு படத்திற்கான படப்பிடிப்பு ஆரம்பிக்கும் முன், ரஜினி திருப்பதிக்குச் சென்று பாலாஜியைத் தரிசித்த பின்னரே Shooting ஆரம்பிப்பது என்ற வழக்கத்தை இன்றும் பின்பற்றுகிறார்.


5) கண்டக்டர் ஆவதற்கு முன்னர், ரஜினி 'கன்னட சம்யுக்தா' என்ற தினசரியில், 3 நாட்கள் உதவி ஆசிரியராக வேலை செய்தார்.


6) தன் முதல் காரான பியட், முதல் ஸ்கூட்டர் லாம்பரெட்டா அனைத்தையும் இன்றும் பத்திரமாக பாதுகாத்து வைத்திருக்கிறார்.







7) இளையராஜாவை "சாமி" என்று தான் ரஜினி கூப்பிடுகிறார். ரமண மகரிஷியையும், திருவண்ணாமலையையும் ரஜினிக்கு அறிமுகப்படுத்தியது இளையராஜா தான். சினிமாவையும் தாண்டிய ஆழ்ந்த நட்பு இருவருக்கும் இடையே உண்டு.


8) ரஜினி இன்றளவும் சாதாரண நோக்கியா 3000 மாடல் போனையே பயன்படுத்தி வருகிறார்.


9) கடுமையாக, உயிரையே உறைய வைக்கும் அளவு ஜில்லிப்பான ருத்ரா பிரயாகில் மற்றவர்கள் தயங்கி நிற்கும் போது, தடாலென வெறும் துண்டுடன் உள்ளே குதித்து ஆனந்தமாய்க் குளிப்பது ரஜினியின் பொழுது போக்கு.







10) ரஜினியின் குசேலன் உருவப்படத்தை அமெரிக்காவின் M&M Candy Company (நம் ஊர் Gems போன்ற மிட்டாய்கள்) ஒவ்வொரு மிட்டாய் மேலும் பொறித்துள்ளது.


11) ரஜினிக்கு மிகப் பிடித்த உணவுப் பொருள்கள் அவித்த வேர்க்கடலையும் சிக்கன் கால்களும் தான்.


12)  ரஜினிக்கு மாறு வேடத்தில், தியேட்டருக்குச் சென்று அடுத்தவர் நடித்த படத்தைப் பார்ப்பதில் கொள்ளைப் பிரியம்.





"ரஜினி பேரக் கேட்டாலே... "    புத்தகத்திலிருந்து.



12-12-12 என்ற Special தினத்தில் பிறந்தநாள் கொண்டாடும் சூப்பர்ஸ்டார் ரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.




ஏற்கனவே ஒரு பதிவில் வெளியிட்ட தளபதி ரீமிக்ஸ் வீடியோ மறுபடியும்.





மீண்டும் சந்திப்போம்.



15 November, 2012

பெண்டு எடுக்கும் டெங்கு

தீபாவளிக்கு எல்லா விடுகளிலும் வெடி சத்தம் கேட்டதோ இல்லையோ கொசு அடிக்கும் பேட் சத்தம் நன்றாகவே கேட்டது. கரண்ட கட்  மற்றும் கொசு தொல்லை காரணமாக இரவு முழுவதும் தூக்கமில்லாமல் கிட்டத்தட்ட அரைமயக்க நிலையில் பகல் முழுவதும் மக்கள் நடமாடிக் கொண்டிருக்கின்றனர். இந்த அழகில் சிக்கன் குனியாவை விட பல மடங்கு பீதியை டெங்கு  கிளப்பிக் கொண்டிருக்கிறது.




குழந்தைகளை அதிகம் குறி வைக்கும் டெங்கு கொசுவின் தாக்கம் பயமுறுத்தும் வகையில் உள்ளது.
1) வாந்தி 
2)  மூட்டுகளில் வலி 
3) தலைவலி 
4) வாய், ஈறுகளில் ரத்தக்கசிவு 
5) காய்ச்சல் 
6) கண்ணில் வலி 

 போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரிடம் சென்று விடுவது உத்தமம். டெங்கு காய்ச்சல் வியாதிக்கு ஓரளவு பெரிய ஆஸ்பத்திரியில் நன்றாகவே சிகிச்சை தருகிறார்கள். இதற்கு தடுப்பு மருந்து சரியாக இல்லாத காரணத்தால் கொசுவை அண்ட விடாமல் வைத்துக் கொள்வதே புத்திசாலித்தனமாக கருதப்படுகிறது.



   


டெங்கு கொசு உரல், டயர் போன்று தண்ணீர் தேங்கும் இடங்களில் அதிகம் உற்பத்தியாகிறது. எனவே நமது வீடு மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் அதிகம் தண்ணிர் தேங்காமல் பார்த்துக் கொள்வது நமக்கு மட்டும் அல்லாமல் நம்மை சுற்றி இருப்பவர்களுக்கும் நல்லது. எல்லாவற்றிற்கும் அரசாங்கத்தையே குற்றம் சொல்லாமல் நாமும் முன்ஜாக்கிரதையுடன் இருப்பது நல்லது.
  

மீண்டும் சந்திப்போம்.


07 November, 2012

பேசும் படம்

'சிலை உயிர் பெற்று வந்தது போல 'என்று  வர்ணிப்பார்கள். அது போல் ஓவியம் என்றே சொல்லமுடியாத படி நிஜமான பெண்ணின் போட்டோ போல் உள்ள இந்த ஓவியங்களை வரைந்தவர் இளையராஜா. (இசைஞானி இளையராஜா இல்லை.)  அவரின் படங்கள் சில.




















இன்று பிறந்தநாள் காணும் கமல்ஹாசனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்







மீண்டும் சந்திப்போம்



11 October, 2012

Google Doodle contest for childrens

இந்தப் பதிவை படிக்கும் அனைவருக்கும் Internet பற்றி தெரிந்திருக்கும். Intetnet பற்றி தெரிந்த எல்லோருக்கும் Google பற்றி தெரிந்திருக்கும். Google பற்றி தெரிந்த பலருக்கு Doodle பற்றியும் தெரிந்திருக்கும். இருந்தாலும் Doodle பற்றி ஒரு சின்ன க.சு.



நம் வீட்டு காலண்டர்களில் காந்தி ஜெயந்தி அன்று காந்தி படத்தை போட்டிருப்பார்கள் அல்லவா? அதே  Concept தான். கூகிள் தனது Home Pageல் வ்ழக்கமான லோகோவிற்கு பதில் சில ஸ்பெஷல் தினங்களில் அந்த நாளை நினைவுப்படுத்தும் விதமாக Special Logo வை வெளியிடுகிறது. அதற்கு Doodle என்று பெயரிட்டுள்ளார்கள்.கிட்டத்தட்ட 1000க்கும் மேற்பட்ட டூடிள்களை கூகிள் வெளியிட்டுள்ளது.


1998 ல் முதன்முதலில் Burning Man Festival ஐ முன்னிடு கூகிள் வெளியிட்ட Doodle



மற்றும் சில ரசிக்கும்படியான Doodles





                                         
                                             































அவ்வப்போது நாமும் பங்கேற்று டூடுள்களை வடிவமைத்து வெளியிடும்படி சில போட்டிகளையும் கூகிள் நடத்தி வருகிறது. China, Ireland,Poland,Newzealand நாடுகளில் நடைபெற்ற போட்டிகளில் வென்ற டூடிள்ஸ்.
 














இந்தியாவில் 2009 முதல் Doodle Contest ஐ Google நடத்தி வருகிறது. 2009, 2010 மற்றும் 2011 ல் டூடிள் போட்டியில் வென்ற படங்கள்













தற்போது கூகிள் Doodle 4 Google Contest இந்தியாவில் அறிவித்துள்ளது. 

5-16 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பங்கேற்கலாம்.
'Unity In Diversity' என்ற தலைப்புக்கேற்றவாறு வடிவமைத்து அனுப்பவேண்டும்.
அனுப்ப வேண்டிய கடைசி நாள் : 23-10-2012
Winning Doodle 14-11-2012 (Children's day) அன்று வெளியிடப்படும்.
Winner டெல்லியில் நவம்பர் மாதம் நடைபெறும் Doodle 4 Google eventல் பங்கு பெறலாம்.

போட்டிகளை அனுப்ப கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து Formஐ டவுன்லோடு செய்து பூர்த்தி செய்து அனுப்புங்கள்.


வெற்றி பெற வாழ்த்துக்கள்.



மீண்டும் சந்திப்போம்




LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...