Showing posts with label neethane en pon vasantham. Show all posts
Showing posts with label neethane en pon vasantham. Show all posts

01 September, 2012

நீ (இளையராஜா) தானே என் பொன்வசந்தம்

 இளையராஜா தலைமுறைகளை தாண்டி நின்று கொண்டிருக்கிறார் என்றால் அதற்கு முக்கிய காரணம் மாற்றம் தான். அன்னக்கிளி, பத்ரகாளியில் இருந்த இளையராஜா குரு, பிரியா  படங்களில் இல்லை. அக்னி நட்சத்திரம், காதல் ரோஜாவே படங்களில் வித்தியாசம் காண்பித்த இளையராஜா ஏனோ அதன் பிறகு நீண்ட காலமாக ஓரிடத்தில் நின்று விட்டார். 




இளையராஜாவின் தீவிர ரசிகர்களான மிகப்பெரிய கூட்டம் அவரின் வழக்கமான இசையை ரசித்துக் கொண்டிருந்தாலும், மனதளவில் சின்ன ஏக்கம் இருந்தது (எனக்கு). அதை உடைத்தெறிந்திருக்கிறார் இளையராஜா நீ தானே என் பொன்வசந்தம் படத்தில். புது வித கம்போசிங்கில் தனதே தனதான ஸ்டைலில் ராஜா ராஜா தான் என்பதை நிருபித்திருக்கிறார். 

நீ தானே என் பொன்வசந்தம்.
புதிய அவதாரம் எடுத்திருக்கிறார் இளையராஜா.





ஏற்கனவே Youtubeல் ஹிட் அடித்திருந்த சாய்ந்து,சாய்ந்து, என்னோடு வா வா சேர்த்து மொத்தம் 8 பாடல்கள். 
என்னோடு வா வா பாடல்கள் Trailorல் கேட்டவுடன் பிடித்திருந்தாலும் என் Favourite song யுவனின் மற்றொரு பாடலான 'பெண்கள் என்றால்' தான். 




 RAJA ROCKS

கதாநாயகியை தேடிப்போகும் கதாநாயகன் பாடுவதாக வரும்  கார்த்திக்கின் குரலில் 'காற்றைக்கொஞ்சம்' ,மற்றும் 'முதல்முறை'  , 'சற்று முன்பு'  என பாடல்களில் வெரைட்டி காட்டி கலக்கியிருக்கிறார்  ராஜா. இளையராஜா பாடியிருக்கும் 'வானம் மெல்ல' பாடலும் சுகம். 'பிடிக்கல மாமு' பாடலில் (நல்ல வேளை S.N.சுரேந்தர் பாடவில்லை) ராஜா காட்டியிருக்கும் வேகம் மற்றும் ஒரு ஆச்சர்யம்.

திருப்தியாக கேட்டு ரசிக்க ஒரு முழு ஆல்பம். 




இளையராஜா மேடையில் பேசியது 
"எட்டு பாடல்களையும் ரெக்கார்ட் செய்தபிறகுதான், என்னால் அந்தமாதிரி செய்யவரும் என்பது எனக்கே தெரியவந்தது. அதுபோல . நிறைய செய்யவேண்டும் என்று எனக்கு ஆசை இருக்கிறது."

இது போன்ற பாடல்களை கேட்க வேண்டும் என்று எங்களுக்கும் ஆசை நிறைய இருக்கிறது. நிறைவேற்றுங்கள் ராஜா

டிஸ்கி
August 20ல் நடந்த இளையராஜாவின் "Be with Me - Maestro"  Programme பற்றி இசைஞானி பக்தன் அருமையாக பதிவிட்டுள்ளார்.  படித்துப்பாருங்கள்


மீண்டும் சந்திப்போம்.



LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...