22 July, 2013

நிஜமா, நிழலா

பதிவு எழுதியே பல மாதங்கள் ஆகி விட்ட நிலையில், பதிவு எழுத வேண்டும் என்றால் பத்திர ஆபிசுக்கு போக வேண்டுமோ? என்ற எண்ணம் தோன்ற ஆரம்பிக்கவே, மனதுக்கு பிடித்த படங்களை போட்டு தேரை உருட்ட ஆரம்பிக்கிறேன். தொடர்ந்து ஓடுமா? அல்லது சத்யராஜ் ஸ்டைலில் 'Basically Iam சோம்பேறி' என்று படுத்துக் கொள்ளுமா? பார்க்கலாம்..
























படங்கள் போட்டோஷாப்பின் உபயமா! அல்லது புகைப்படகலைஞரின் உபயமா! என்பது முக்கியமல்ல. அது சொல்லும் செய்தி தான் முக்கியம்.


படங்களை அனுப்பிய நண்பர் உதிர்த்த தத்துவம் :

சலனமில்லாத தண்ணீரில் பிம்பங்கள் தெளிவாக தெரிவது போல்
சலனமில்லாத மனதில் தன்னைப் பற்றிய பிம்பமும் தெளிவாக தெரியும்.


மீண்டும் சந்திப்போம்.


28 January, 2013

இளையராஜாவை திட்டித்தீர்த்த பாரதிராஜா

தன் படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கே தலையை காட்டாத இளையராஜாவிடம்  இப்பொழுது நிறைய மாற்றங்கள். தான் இசையமைக்காத அன்னக்கொடியும் கொடிவீரனும் படத்தின் இசை வெளியிட்டு விழாவிற்காக மதுரை வந்திருந்தார். விஜய் டிவி இசை வெளியீட்டு விழாவை இமயத்திற்கு முதல் மரியாதை என்று உருமாற்றி பல பிரபலங்களுடன் (இந்த படத்தில் பாடல் எழுதியிருந்த வைரமுத்து தவிர) களமிறங்கியது.



 
எல்லோரும் பாரதிராஜாவை பாராட்டினாலும் ஒவ்வொரு முறை மேடை ஏறும் போதும் பாரதிராஜா இளையராஜாவை வானளாவ புகழ்ந்தார். என்ன ஒன்று புகழின் உச்சிக்கு கொண்டு சென்று அங்கிருந்து தொம்மென்று கீழே போட்டு விட்டார். தண்ணியடித்திருப்பவர்கள் மத்தியில் தண்ணியடிக்காமல் உட்காந்திருப்பதை விட பெரிய இம்சை எதிரும் புதிருமான இருவருக்கு இடையில், இருவருக்கும் நண்பராய் இருப்பது. பாரதிராஜா அது போன்ற ஒரு தர்மசங்கடமான சுழலில் மாட்டிக்கொண்டிருக்கிறார். தனக்காக நடத்தப்படும் இந்த விழாவில் அந்த இருவரையும் ஒன்றாக மேடையேற்றி விடவேண்டும் என்று போராடி கடைசியில் தோற்றுப் போன ஆதங்கம் வெளிப்படையாக தெரிந்தது. 




 நீ என் மேல் கோபப்பட்டாலும் பரவாயில்லை என்று ஆரம்பித்த பாரதிராஜா மதுரையில் மொட்டைக் கோபுரம் ஒன்று தனியாக நிற்பது உனக்கு தெரியவில்லையா? மன்னிப்பது தான் மனித இயல்பு. மன்னித்து விடு. என்றவர் ,மறுபடியும் ஒன்றாக இணைய வேண்டும் பாரதிராஜா இளையராஜா வைரமுத்து என்று தனக்கே உரித்தான ஒங்கிய குரலில் சொல்லி விட்டு விருவிரு வென்று கீழே இறங்கி விட்டார். இறுகிய முகத்துடன் இளையராஜா பார்த்துக் கொண்டே இருந்தார்.




பிறகு கங்கை அமரனைப் பற்றி பேச்சு வந்த போது "மறுபடியும் இதே பிறவி எடுக்க முடியுமா? தம்பி தானே! அவன் மேல் என்ன கோபம்" என்று ஆரம்பித்தவர், சரி விடு நிறைய பேசி வேண்டி வரும் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று வேறு டாபிக் போய் விட்டார். ஏற்புரையில் G.V.பிரகாஷ்குமார் பற்றி பேசிய போது வாழைமரம் கூட தனக்கு பின் ஒரு குருத்தை விட்டுப் போகிறது உனக்கு பின் ஆள் வேண்டாமா? வருபவர்களை பாராட்ட வேண்டியது தானே! என்றார். அதே சமயம்  என் தாயிடம் கூட கெஞ்சியதில்லை. உன் ஒருவனிடம் தானே பணிந்திருக்கிறேன் என்றும் உருகினார். 




இளையராஜாவின் இசையை போதும் போதும் என புகழ்ந்தார். அதே அளவிற்கு இளையராஜாவின் குணத்தை குற்றம் கூறினார். பேசிய விஷயங்கள் சரி என்றாலும் வேறு இசையமைப்பாளரின் இசை வெளியீட்டு விழாவாக இருந்தாலும் பாரதிராஜா என்ற நண்பனுக்காக யுவன், கார்த்திக், பவதாரனி என இளையராஜா தன் குடும்பத்துடன் வந்திருந்ததற்காக கொஞ்சம் அடக்கி வாசித்திருக்கலாம் பாரதிராஜா. இன்னும் நிறைய பேசினார். எனக்கு தான் மறந்து விட்டது. கட் செய்யாமல் விஜய் டிவியில் போட்டால் பார்த்துக் கொள்ளலாம்.




ஏற்புரை பாரதிராஜா என்று போட்டிருந்தாலும் நிகழ்ச்சி முழுவதும் பாரதிராஜா பேசிக்கொண்டே தான் இருந்தார். வழக்கம் போல் நிறைய ஆங்கிலம் பேசினார். யாருக்கும் மரியாதை தராமல் பேசினார். ஆனால் இளையராஜா மிக சுருக்கமாக தனது பேச்சை முடித்துக் கொண்டார். ரசிகர்கள் பாடச்சொல்லி சததமிட, நான் இங்கு பாட வரவில்லை என்றவர் ரசிகர்கள் தொடந்து கூச்சலிட, பாடாமல் விடமாட்டீர்கள் போல என்று பாடத் தயாரானார். அதற்குள் பாரதிராஜா எதை, எதையோ பேசி திசை திருப்பி விட்டு விட்டார்.




டிஸ்கி:

இயக்குனர் மகேந்திரன் பாரதிராஜாவிற்கும் தன்க்குமான உறவைப் பற்றி பேசும் போது கூறியது, " பாரதிராஜா தனது தாயைப் பற்றி பேசும் போது வார்த்தை வராமல் தடுமாறினார். பாரதிராஜாவைப் பற்றி பேசும் போது நானும் அது போன்ற மனநிலையில் தான் உள்ளேன். என்ன பேசுவது என்றே புரியவில்லை. சினிமாவைப் போல் இங்கும் இளையராஜா ரீரிகார்டிங் செய்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். ஏனென்றால் நாம் மனதில் நினைப்பதை நம்மை விட மிகத்திறமையாக வெளிப்படுத்த இளையராஜா ஒருவரால் தான் முடியும்" 

That is Raja 




படங்கள் இணையத்தில் இருந்து எடுக்கப்பட்டது.

மீண்டும் சந்திப்போம்.




22 December, 2012

Share Auto - பாவமும் ஷேர் தானே!

'கரணம் தப்பினால் மரணம்' என்ற ரீதியில் நித்தம் நித்தம் பயணம் செய்யும் மக்களின் வழியில் புகுந்து விளையாடும் வாகனங்களில் முதல் இடம் பெறுவது நிச்சயமாக ஷேர் ஆட்டோக்கள் தான். இஷ்டத்திற்கு ஓடித்திரிந்த மினிபஸ்காரர்களை நல்லவர்கள் ஆக்கிய பெருமை ஷேர் ஆட்டோக்களுக்கு தான் சேரும்.



சமீபத்தில் மதுரையில் மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தின் அருகில்  ஒரு தந்தை தன் மகளை கல்லூரிக்கு பைக்கில் இறக்கி விடசென்ற போது முன்னாள் சென்ற ஷேர் ஆட்டோ தீடிரென இடது புறமாக திரும்ப பைக் ஓட்டி  வந்தவர் தடுமாறி ரோட்டில் மகளுடன் கீழே விழுந்திருக்கிறார். பின்னால் வந்து கொண்டிருந்த தண்ணீர் லாரி தந்தை மகள் இருவர் மீதும் ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே இருவரும் பலியாகி விட்டனர். தப்பி ஓடிய லாரி ஓட்டுனரை போலிஸ் தேடுகிறது என்பது செய்தியாகி விட்டது. ஆனால் தீடிரென்று திருப்பிய ஷேர் ஆட்டோவும்,  ஆட்டோவில் ஏறிய  பயணியும் நிற்காமல் கூட போய் விட்டனர்.



வெறும் 7 ரூபாய்க்கு ஆசைப்பட்டு ரோட்டைப் பார்த்து வண்டி ஒட்டாமல் ஓரத்தில் யாராவது தலையை சொறிந்தால் கூட சட்டென்று வண்டியை திருப்பும் ஷேர் ஆட்டோக்களால் தினம்,தினம் விழுந்து எழும் வாகனங்கள் அதிகம். பின்னால் வண்டி வருவதும் வராததும் நம் அதிர்ஷ்டத்தை பொருத்தது. ஆனால் ஷேர் ஆட்டோ என்றால் எங்கு வேண்டுமானாலும்    ஏறலாம், இறங்கலாம் என்ற எண்ணத்தில் நடமாடும் மக்களும் இது மாதிரியான விபத்துகளுக்கு நாம் தான் முதல்  காரணம் என்பதை உணர வேண்டும் . சிறிது தூரம் நடந்து சென்று ஏறிக்கொள்வதால் நமக்கும், நம்மை சுற்றி இருப்பவர்களுக்கும் நல்லது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.



                                                    விலை மதிப்பில்லாதது உயிர் 


மீண்டும் சந்திப்போம்.


17 December, 2012

மனைவியை பக்கத்தில வைச்சுக்கிட்டு படிக்காதீங்க!


மனைவி: என்ன பார்த்துகிட்டு இருக்கிங்க
கணவன்: ஒண்ணுமில்ல!
மனைவி: ஒண்ணுமில்லாமயா ஒரு மணிநேரமா மேரேஜ் சர்டிபிகேட்ட
                    பார்த்துகிட்டு இருக்கிங்க!
கணவன்: எங்கேயாவது எக்ஸ்பிரி டேட் போட்டுருக்கானு பார்க்கிறேன்.!!


                                              

மனைவி:- உங்களுக்கு ராணின்னு ஏற்கனவே ஒரு மனைவி இருக்கான்னு
                     கல்யாணத்துக்கு முன்பே ஏன் என்கிட்டே சொல்லலை..
கணவன்:- சொன்னேனே... மறந்துட்டியா...
மனைவி:- எப்போ சொன்னீங்க...நீங்க சொல்லவே இல்லை..
கணவன்:- உன்னை ராணி மாதிரி வச்சி காப்பாத்துவேன்னு நான் சொல்லலை..
மனைவி:-????????





மனைவி :- கருமம்... கருமம்.. பக்கத்து வீட்டுக்காரிக்கு ரெண்டு பேரோட
                       கள்ளத் தொடர்பு இருக்காம்.
கணவன் :- அப்படியா!  இன்னொருத்தன் யாருன்னு தெரியலையே?





பெண்: என்னை கல்யாணம் பண்ணிகிட்டா உங்களோட எல்லா துக்கத்துலயும்
              நான் பங்கெடுத்துகுவேன!
ஆண்: சந்தோசம், ஆனா எனக்கு ஒரு பிரச்சனையும் இப்ப இல்லையே!
பெண்: என்னை நீங்க இன்னும் கல்யாணம் பண்ணிக்கவே இல்லையே!





கணவன் : ஐயையோ! திடீரென நெஞ்சு வலிக்குதே..?
மனைவி : என்னங்க நீங்க! நம்ம வக்கீல் ஊர்ல இல்லாத நேரத்தில இப்படி
                     சொல்றீங்க..!



மீண்டும் சந்திப்போம் ....




LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...