Showing posts with label vijayakanth. Show all posts
Showing posts with label vijayakanth. Show all posts

18 October, 2011

கரெக்டா சொல்லியிருக்காரு கேப்டன்

                                                                       முதல் கட்ட தேர்தல் முடிந்ததும்
முதல் கட்டமாக அதிமுகவை எதிர்த்து திருவாய் மலர்ந்திருக்கிறார்
விஜயகாந்த். திமுக வை போல் அதிமுகவும் தேர்தல் அராஜகம்
செய்வதாக குற்றம் சாட்டியுள்ளார். இனி தினமும் அறிக்கை எதிர்
பார்க்கலாம் என நினைக்கிறேன்.




                                                       ஆனால் நான் சொல்ல போகும் மேட்டர்
வேற. அப்போது பேசிய விஜயகாந்த் உள்ளாட்சி தேர்தலே தேவை
இல்லை என கூறியுள்ளார். ஆளும் கட்சியிடமே அந்த பொறுப்பை
ஒப்படைத்து விடலாம் என்பது போல் பேசியுள்ளார். உண்மை தானே!
உள்ளாட்சி அமைப்பை கொண்டு வந்ததே நிர்வாக வசதிகளுக்கும்,
நாட்டின் மூலை முடுக்கு எல்லாம் அரசின் திட்டம் போய் சேர வேண்டும்
என்று தானே!.ஆனால் வார்டு மெம்பர் சுயேட்சை, கவுன்சிலர் திமுக,
மேயர் அதிமுக என்று இருந்தால் எப்படி வேலை நடக்கும். முன்பு கூட
வெளியில் அடித்து கொண்டாலும் ஊழல் போன்ற விஷயங்களில் ஒன்று
சேர்ந்து கொள்வார்கள். இப்போது எல்லாம் சரிக்கு சரி நகம் போட்டு
கொள்கிறார்கள். இந்த அழகில் நிர்வாகத்தை  எங்க ஒழுங்காக நடத்தறது.

                                                                              ஆனா விஜயகாந்த் சொன்னதுக்கு
காரணம் இதெல்லாம் இருக்காது.
                          1) சும்மா, சும்மா செலவு செய்யனுமே!
                          2) தனி ஆளா மறுபடியும் ஊர்,ஊரா சுத்தனுமே!
                                               முக்கியமா
                          3) 41 வேட்பாளர் பேரை ஞாபகம் செய்யறதுக்கே நாக்கு
                               தள்ளி போச்சு, இதுல இத்தனை வேட்பாளர் பேரை எப்படி
                              ஞாபகம் வைத்து கொள்வது என்பது போன்ற காரணமாக
                               கூட இருக்கலாம்.




மீண்டும் சந்திப்போம்.

                                                      

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...