Showing posts with label SMS. Show all posts
Showing posts with label SMS. Show all posts

29 September, 2012

கூ தூ கா நல்லது

தலைப்பு புரிகிறதா?, தவறு ஒன்றும் இல்லை. சுத்தத் தமிழில் கூறியுள்ளேன். அவ்வளவு தான். ஓர் எழுத்துச் சொற்கள் எல்லா மொழிகளிலும் உண்டு. நம்மிடம் கொஞ்சம் அதிகமாகவே இருக்கிறது. ஒரே ஒரு சிக்கல். அவைகளில் பெரும்பாலான சொற்கள் புத்தகத்தில் மட்டுமே உள்ளன புழக்கத்தில் இல்லை. தமிழ் ஒரெழுத்துச் சொற்களை கீழே பட்டியலுட்டுள்ளேன்.




                                                  தமிழ் ஓரெழுத்து சொற்கள்
 
 எட்டு
 ஆ
 பசு
  ஈ
 கொடு, பறக்கும் பூச்சி
  உ
 சிவன்
  ஊ
 தசை, இறைச்சி
  ஏ
 அம்பு
  ஐ
 ஐந்து, அழகு, தலைவன், வியப்பு
  ஓ
 வினா, மதகு - நீர் தாங்கும் பலகை
  கா
 சோலை, காத்தல்
  கூ
 பூமி, கூவுதல்
  கை
 கரம், உறுப்பு
  கோ
 அரசன், தலைவன், இறைவன்
  சா
 இறப்பு, மரணம், பேய், சாதல்
  சீ
 இகழ்ச்சி, திருமகள்
  சே
 எருது, அழிஞ்சில் மரம், சிவப்பு
  சோ
 மதில், அரண்
  தா
 கொடு, கேட்பது
  தீ
 நெருப்பு
  து
 கெடு, உண், பிரிவு, உணவு, பறவை இறகு
  தூ
 வெண்மை, தூய்மை,
  தே
 நாயகன், தெய்வம்
  தை
 மாதம், தையல்
  நா
 நாக்கு
  நீ
 நின்னை
  நே
அன்பு, நேயம்
  நை
 வருந்து, நைதல்
  நொ
 நொண்டி, துண்பம்
  நோவு
 நோவு, வருத்தம்
  நெள
 மரக்கலம்
  பா
 பாட்டு, நிழல், அழகு
  பூ
 மலர்
  பே
 மேகம், நுரை, அழகு
  பை
 பாம்புப்படம், பசுமை, உறை










 போ
 செல்
 மா
 மாமரம், பெரிய, விலங்கு
 மீ
 உயரம், மேலே, ஆகாயம்
 மு
 மூப்பு
 மூ
 மூன்று
 மே
 மேல், மேன்மை
 மை
 அஞ்சனம், கண்மை, இருள், செம்மறி ஆடு
 மோ
 மோதல், முகர்தல்
 யா
 மரம், அகலம்
 வா
 அழைத்தல்
 வீ
 பூ, அழகு, பறவை
 வை
 வைக்கோல், கூர்மை வைதல், வைத்தல்
 வெள
 கெளவுதல், கொள்ளை அடித்தல்



                                                          இப்பொழுது உள்ள SMS மற்றும் Facebook யுகத்தில் ஆங்கிலத்தில் பல வார்த்தைகள் ஒரெழுத்து சொற்களாகி விட்டன. உதாரணத்திற்கு C = See, Y = Why, U = You, R = Are, V = We. இன்னும் நிறைய இருக்கிறது. SMS அதிகம் உபயோகிப்பவர்களை கேட்டால் அள்ளி வீசுவார்கள். ஆனால் நாம் நிறைய ஒரெழுத்து சொற்களை கையில் வைத்துக் கொண்டு உபயோகம் செய்யாமல் வைத்திருக்கிறோம். குறைந்த பட்சம் மூன்றுக்கு மூன்று எழுத்துக்களை வீணடிக்காமல் 'மூ' என்றும், நாட்டில் பல அரசியல்வாதிகள்  'வெள'வுகிறார்கள் என்றும் எளிதாக சொல்லலாம்.



மீண்டும் சந்திப்போம்.


11 January, 2012

கோன் பனேகா கோடீஸ்வரன் விளையாட ரெடியா?

அமிதாப்,ஷாருக்கான்,சரத்குமார் என பல நடிகர்கள் பல்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு பெயர்களில் நடத்திய KBC என சுருக்கமாக அழைக்கப்படும் குரோர்பதி புரோக்ராம் இப்பொழுது விஜய் டிவியில் சூர்யா மூலமாக வருகிறது. அறிவு சார்ந்த நிகழ்ச்சியாக அறியப்பட்ட இந்த நிகழ்ச்சி இப்போழுது லாபம் கொழிக்கும் நிகழ்ச்சியாக உருமாறியதற்கு முக்கிய காரணம் Mobile மற்றும் SMS தான். சர்வசாதாரணமாக SMS அனுப்புங்கள் என்று சொல்லி விடுகிறார்கள். மக்களும் விரல் தேய,தேய அனுப்பி குவிக்கிறார்கள். ஒரு SMS என்ன Charge என்று தெரியுமா என்று கூட தெரியவில்லை. அப்படியே தெரிந்தாலும் கவலைப்படுவதில்லை. லாட்டரி டிக்கட் மாதிரி மனதை தேற்றிக்கொள்கிறார்கள். (வந்தா லாபம் தான!) வியாபார உலகில் இதெல்லாம் சகஜம் தான்.




இது ஒரு Flash Game அப்படியே கோன் பனேகா குரோர்பதி போலவே வாய்ஸ் கூட அமிதாப் மாதிரியே இருக்கிறது. விளையாடிப்பாருங்கள். செலவும் இல்லை, வரவும் இல்லை. சும்மா டைம் பாஸ் தான். எத்தனை கேள்விகளுக்கு விடை தெரிகிறது என்று பெருமை பட்டுக்கொள்ளலாம். அதிகம் கேள்விகள் இல்லை என்ற ஒரு குறை தான். மற்றபடி Crorepati நிகழ்ச்சி மாதிரியே தான் இருக்கிறது.





மீண்டும் சந்திப்போம்.


LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...