10 July, 2011

சன் பிக்சர்ஸ் பெருமையுடன் வழங்கும் ' 2ஜி ஸ்பெக்ட்ரம்'




2 ஜி ஸ்பெக்ட்ரம் என்ற பெயரில் புதிதாக ஒரு
படம் இன்று முதல் கிளப்பியிருக்கிறார்கள். ஸ்பெக்ட்ரம் ஊழலை பற்றித்தான்
படம் என்றும் நீரா ராடியா கேரக்டரில் லட்சுமிராய் நடிப்பதாகவும், முக்கிய
வேடத்தில் நடிக்க சத்யராஜிடம் பேச்சுவார்த்தை நடப்பதாகவும் தயாரிப்பு
தரப்பு தெரிவித்து உள்ளது.


ஆனால் வழக்கு நடந்து கொண்டிருக்கும் போது
இந்த படத்தை எடுப்பதில் எந்த அளவு சட்ட சிக்கல் இருக்கும் என்று தெரியவில்லை. ஆளும் தரப்பில் இருந்து நல்ல சப்போர்ட் கிடைக்கும் என்பது
மட்டும் உறுதி.


படத்தின் பப்ளிசிட்டிக்கு பஞ்சமிருக்காது. பார்க்கிற மாதிரி
எடுப்பார்களா பார்ப்போம். பட விளம்பரத்தில் பெயர் சொல்லும்படி ஒருத்தரும் தெரியவில்லை. எல்லாம் புதுமுகம் போல் தெரிகிறது.

என்ன மேட்டர்னா இந்த படத்தை சன் பிக்சர்ஸ் வெளியிடுமா?
சன் டிவியில் அவர்கள் படத்திற்கு செய்யும் விளம்பரத்தை இந்த தலைப்பில் கற்பனை செய்து பாருங்கள்.



' சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் பெருமையுடன் வழங்கும் 2ஜி ஸ்பெக்ட்ரம்'

சும்மா அதிருதில்ல


மீண்டும் சந்திப்போம்.





உல்டா கவிஞர்கள்

ஒன்றை பார்த்தால் அதற்கு உல்டாவாக யோசிப்பதற்கென்றே ஒரு
கூட்டம் உள்ளது.


'உன் நன்பர்களை பற்றி சொல், உன்னை பற்றி சொல்கிறேன்' என்று ஒருவர்
ஆரம்பித்தால் 'உன்னை பற்றி சொல், உன் நன்பர்களை பற்றி சொல்கிறேன்'
என்று ஒரு குருப்பே கிளம்பி விடுகிறது.
சமீபத்தில் அதை போல் ஒன்று பத்திரிகைகளில் பார்க்க நேர்ந்தது.
இப்ப நாம சகஜமா பார்க்கிற கவிதைங்ற தலைப்பில் வருகிற கவிதை மாதிரி,
வரிசை படுத்தின வரிகள் மாதிரியான பொன்மொழி மாதிரியான ஒன்று.
நான் நுனிப்புல் மேய்பவன் என்பதால் வரிகள் குத்துமதிப்பாக தான் உள்ளது.



'கிளி ஜோஸ்யம் பாருங்கள், கிளிக்கு சிறிது நேரம் விடுதலை கிடைக்க' என்று
ஒருத்தர் எழுத பின்னாடியே ஒருத்தர் ஆனியே பிடுங்கவேணாம்ங்கற மாதிரி
'கிளி ஜோஸ்யமே பார்காதீர்கள், கிளிகள் சுத்ந்திரமாக இருக்கட்டும்' என்று
எழுதியிருந்தார்.

இதை பத்தி மல்லாக்க படுத்துக்கிட்டு Fanஐயே பாத்துக்குட்டு
யோசிச்சுக்கிட்டே ! ! ! இருக்கும்போது மடார் ஒரு விஷயம் தோணுச்சு.
நாம முடிவெடுக்கிற பல விஷயங்களும் இப்படி தான் இருக்குது. பேயை
பாத்தாச்சு, இப்ப பிசாசை பாப்போம் என்றோ, இருக்கிறதுல யார் கொஞ்சமா
கொள்ளையடுக்கிறாங்களோ அவங்களுக்கு ஓட்டு போடுவோம் என்று பலர்
கிளம்பினால், யாரும் வேணாம் '49 O' போடுகிறேன் என்று சிலர் கிளம்புகிறாங்க.
இப்போதுள்ள சூழ்நிலையில் இந்த 'சிலர்' 'பலர்' ஆவது நல்லது போல் தோண்றது.
முழுசும் படிச்சு முடிச்சீங்கனா ஏதாவது சொல்லிட்டு போங்க.

மீண்டும் சந்திப்போம்.

03 June, 2011

BIRTHDAY WISHES TO ISAIGANI ILAYARAJA

                                       LONG LIVE RAJA

                      June 3,1943 - ல் ஊற்றெடுத்த இசை பொங்கி பிரவாகமாய் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருக்கிறது. இசை வெள்ளம் மென்மேலும்   பெருக்கெடுத்து  ஓட வாழ்த்துகிறேன்.



                     திருவண்ணாமலை ஸ்ரீ ரமணாஷ்மரத்தில் 30-4-2011-ல்  'ஒரு நாள் ஒரு கனவு' படத்தில் வரும் 'காற்றில் வரும் கீதமே' பாடலின் மெட்டில்                  இளையராஜா  பாடும் 'திருச்சுழி நாதன்'   என்ற பாடல் இசைக்கோர்வை 
எதுவும்  இல்லாமல் அவரின் குரலில் மட்டும்




                  மகாத்மா காந்தி அவர்களின் 'நம்ரதா கா ஸாகர்' என்ற பஜன் பாடலுக்கு   இளையராஜா இசை அமைத்து உள்ள வீடியோ



                   இளையராஜா அவர்களின் இசைக்கச்சேரியில் ட்ரம்ஸ்   சிவமணியின்  Final Touch







மீண்டும் சந்திப்போம்.

04 May, 2011

நாங்க - 80 களின் இசை


சமீபத்தில் 'நாங்க' படத்தின் இசை வெளியிடப்பட்டுள்ளது. 80 களில்

ஆரம்பித்து 2010 ல் முடிவது போல் கதையாம். சுப்ரமணியபுரம் பாதிப்பில்

இருந்து இன்னும் தமிழ் சினிமா மீளவில்லை போலிருக்கிறது.

வெளிடப்பட்டுள்ள Stills - ஐ பார்க்கும் போது பாலைவனச்சோலை படம் வேறு

ஞாபகம் வருகிறது.


இயக்கம் - செல்வா


தலைவாசல்,அமராவதி,பூவேலி என்று சில நல்ல படங்கள் கொடுத்திருந்தாலும்,

நான் அவன் இல்லை,தோட்டா என பயமுறுத்தியும் உள்ளார்.


இசை - பாலபாரதி

தலைவாசல்,அமராவதி (இரண்டும் Super Hit) என செல்வா Combination - ல் நீண்ட

இடைவேளைக்கு பின் இணைந்திருக்கிறார்.
இடையில் (1993 - 2011)

சொல்லிக்கொள்ளும்படி அவருக்கு படங்களும் வரவில்லை, பாடல்க்ளும் Hit

ஆகவில்லை. 'மகேசன்' என்ற படத்தில் 'காதல் வந்தால்' என்ற பாடல் நன்றாக

இருந்தாலும் பெரிதாக கேட்கபடவில்லை.

நாங்க படத்தின் பாடல்கள் நிச்சயமாக அவரின் மிகப்

பெரிய இடைவெளியை ஈடு செய்திருக்கிறது என்றே சொல்லவேண்டும்.

80 களில் வந்த இசையை கேட்பது போல் மிக நன்றாக உள்ளது.



மீண்டும் சந்திப்போம்.




LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...