04 October, 2011

உலக மகா காமெடி

                                                                         இந்த ஆண்டு அமைதிக்கான நோபல்
பரிசுக்கு இந்தியாவின் சார்பில் சோனியா காந்தியின் பெயர்  பரிந்துரை
செய்யப்பட்டுள்ளது. அன்னை தெரசா (!) மாதிரியான அந்தஸ்து இந்தியாவில்
இவருக்கு இருப்பதாக, பரிந்துரை செய்த சர்வதேச விழிப்புணர்வு மையத்தின்
தலைவர் மஜாஸ் முங்கேரி சொல்லியிருக்காரு.

                                                                         உண்மையில் இந்த விருதுக்கு இவரை
விட தகுதியானவங்களை நீங்க இந்த உலகத்தில எங்கேயும் பார்க்க முடியாது.
அம்மணி சத்தியமூர்த்தி பவனில் அமைதி நிலவ பட்ற பாடு சொல்லி மாளாது.
ஒண்ணு கவனிக்கனும். அமைதிக்கு பாடுபடுவதாக தான் சொல்லியிருக்காங்க.
அதனால தங்கபாலுவும், இளங்கோவனும் தொடர்ந்து இது போல் சண்டை
போட்டுக்கிட்டே இருந்தா அவங்களும் அமைதிக்கு பாடுபட்டுக்கிட்டே
இருப்பாங்க புரியுதா?



                                                                    பரிந்துரை செயதவங்களுக்கு கொஞ்சம்
சொல்லுங்க, காங்கிரஸ் பிரச்சனைக்கு எல்லாம் நோபல் கிடையாது. உலக
அமைதிக்கு பாடுபடனும்னு. என்னது அப்படின்னா என்னாவா?

                                       என்ன கொடுமை சரவணன் இது!


        பழைய ஜோக்.

              கே: இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கி கொடுத்தவர் யாரு?
             
               ப : இந்திரா காந்தி.

              பாதி கரெக்ட். 1/2 மார்க் போட்டுருங்க.

                                            அது மாதிரி இவங்களுக்கு பாதி நோபல் கிடைக்கும்னு
நினைச்சுட்டாங்களா?

                               அரசியல்ல இதெல்லாம் சாதாரணப்பா!

மீண்டும் சந்திப்போம்.


03 October, 2011

சிங்கத்துடன் தான் மோதுவேன்

                                                                               நல்லதம்பி ஒரு நாள் சர்க்கஸ்
பார்க்க போயிருந்தார். கூட்டம்னாலும் கூட்டம் பயங்கர கூட்டம். நம்மூரு
அரசியல்வாதிகளை விட நல்லா வித்தை காட்டிக்கிட்டிருந்தாங்க. அப்ப
பாத்தீங்கனா பயங்கர பில்டப்போட ஒரு சிங்கம் வந்துச்சு. பின்னாடியே
ஒரு பொண்ணும் வந்துச்சு. சிங்கம் வாயில ஒரு சாக்லேட் வச்சுக்கிட்டு நிக்க, அந்த பொண்ணு தன் வாயேலே அந்த  சாக்லேட்ட எடுத்துட்டா.
பயங்கர கைத்தட்டல்.




                                                        இப்ப அங்க நின்னுக்கிட்டு இருந்த ரிங் மாஸ்டர் கூட்டத்தை பார்த்து 'யாருக்காவது இப்படி செய்ய தில் இருந்தா மேடைக்கு வாங்க' னு கூப்பிட்டார். நல்லதம்பி படார்னு எந்திரிச்சு மேடை ஏறிட்டார்.
ரிங் மாஸ்டர் நல்லதம்பியை ஒரு லுக் விட்டுட்டு சிங்கம் வாயில
இன்னொரு சாக்லேட்ட வச்சுட்டு இப்ப எடுங்க அப்படின்னார். 
ரிங் மாஸ்டரை முறைச்சு பார்த்த நல்லதம்பி

                           'என்னைய என்னா நினைச்சீங்க? சிங்கம் செய்யறத  நான்
                            செய்கிறேன். அந்த பொண்ண வந்து எடுக்க சொல்லுங்க'  
                                                              அப்படின்னாரு. எப்படி.


மீண்டும் சந்திப்போம்.


02 October, 2011

வசூல்ராஜாவான அமைச்சர்

                                                                                        வசூல்ராஜா படத்தில் கமல்
பரிட்சை எழுதாமல்  ஆள் மாறாட்டம் செய்து கிரேசி மோகனைஅனுப்பி
விடுவார். நிஜத்தில் அவ்வப்போது மாணவர்கள் பிடிபடுவதும் சகஜம்.
ஆனால் இப்போது புதுச்சேரி கல்வி அமைச்சர் !  பத்தாவது பரிட்சை !!
எழுதும் போது ஆள் மாறாட்டம் செய்து விட்டதாக புகார் எழுந்துள்ளது.


                                                               திண்டிவனம் பள்ளியில் புதுச்சேரி கல்வி
அமைச்சர் கல்யாணசுந்தரம் 22ந் தேதி அறிவியல் பரிட்சை எழுதினாராம்.
விஷயம் கேள்விப்பட்ட பத்திரிக்கையாளர்கள் மறுநாள் வெள்ளிக்கிழமை
சமூக அறிவியல் பர்ட்சை எழுத வருவார் என வழி மேல் விழி வைத்து காத்து
இருக்க மனுசன் வரவேயில்லை. ஆனால் அவருக்கு பதிலா உள்ளே யாரோ எழுதிக்கொண்டிருக்கிறார்கள் என்று செய்தி பரவ இப்போழுது அறிவியல் விடைத்தாளையும், சமூக அறிவியல் விடைத்தாளையும் கையெழுத்து வைத்து ஒப்பிட்டு பார்க்கப் போவதாக கல்வித்துறை அதிகாரிகள் அறிவித்து உள்ளனர்.




                                                                                         அதெல்லாம் போகட்டும் விடுங்க,
அரசியல்வாதிகளுக்கு  படிப்பு தேவையில்லை என்பது எழுதப்படாத சட்டமாகி
விட்டது. ஆனால் கல்வித்துறை அமைச்சரே பத்தாவது பரிட்சை இப்பத்தான்
எழுதப்போறாருங்கறது மாண்புமிகு முதல்வர் ரங்கசாமி அவர்களே கொஞ்சம்
ஓவரா தெரியலை. ஒருவேளை மாணவர்கள் படும் கஷ்டம் புரியனும்னு
பரிட்சை எழுதினாரோ என்னமோ?

                                                           வாழ்க ஜனநாயகம்.


மீண்டும் சந்திப்போம்.


01 October, 2011

ரத்தத்தின் ரத்தமே

                                                                             பாசம்,கோபம்னு எல்லாத்துக்கும்
சொல்லிக்காட்ட நம்ம உடம்பில ஒன்னு இருக்குன்னா! அது ரத்தம் தான்.
என் ரத்தம்டா!! ன்னு மார் தட்டிக்கிற்வங்களும் இருக்காங்க, ரத்தவெறி
பிடிச்சவனா இருக்கானேன்னு திட்ட்ப்படுபவர்களும் இருக்காங்க. ஆனா
ரத்ததுக்கு இந்த மேட்டரெல்லாம் தெரியாது. உடம்பிலுள்ள செல்களுக்கு
Oxygen,Nutrition ஐ கொடுக்கவும்,Waste களை எடுத்து வருவதும் தான்
ரத்ததின் மிக முக்கியமான பணி. 


                                                                       
                                                                               ரத்தத்தில் கிட்டத்தட்ட 8 வகைகள்
உள்ளன.

  1.  O Positive
  2.  O Negative
  3.  A Positive
  4.  A Negative
  5.  B Positive
  6.  B Negative
  7.  AB Positive
  8.  AB Negative


                                                                         அடிபட்டவுடன் ஒருவருக்கு முதலில்
தேவைப்படுவது  ரத்தம் தான். ஆனால் நம்மால் ஒரு துளி ரத்தத்தை கூட 
செயற்கையாக உருவாக்க முடியாது. இது போன்ற சூழலில் தான் சக மனிதனின் உதவி தேவைப்படுகிறது. சராசரி மனிதனின் உடலில் சுமார்
5 லிட்டர் ரத்தம் உள்ளது. நாம் ஒரு தடவை ரத்தம் கொடுக்கும் போது
சுமார் 350 மில்லி லிட்டர் மட்டுமே எடுக்கப்படுகிறது. அதுவும் 24 மணி
நேரத்தில் மறுபடி ஊறி விடும்.  நாம் இழக்கும் ரத்த சிவப்பணுக்கள் 60
நாட்களுக்குள் சீராகிவிடும்.



சில விபரங்கள்.

           ரத்தம் கொடுக்க 10 நிமிடம், ஒய்வுக்கு 20 நிமிடம் ஆக 30 நிமிடம்
                         செலவழித்தால் போதும்.

           ரத்தம் கொடுப்பதால் நமக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.

           ரத்தம் கொடுப்பதற்கு 48 மணி நேரத்திற்கு முன்பாக எந்த போதைப்
                          பொருட்களையும் உபயோகப்படுத்தியிருக்ககூடாது.
                            ( எப்பவும் USE  பண்ணலனா நமக்கும் நல்லது.)

            இதய, சிறுநீரக, நுரையீரல், ஆஸ்துமா நோயாளிகள் மற்றும்
                         கர்ப்ப காலத்தில் உள்ளவர்கள் ரத்தம் கொடுக்ககூடாது.

             வயது 18 க்கு மேலும் (சட்டத்திற்காக) , 65 க்கு உள்ளேயும் இருக்க
                           வேண்டும்.


              ரத்தம் கொடுத்து 3 மாதங்கள் சென்ற பின்னரே அடுத்த ரத்தம்
                           கொடுக்க  வேண்டும்.


                                                                                    என்ன திடீர்னு இதெல்லாம் என்பவர்களுக்கு இன்று (அக்டோபர் 1) இரத்தக்கொடையாளர்கள் தினம்.
ரத்தம் கொஞ்சம் கொடுத்து நாமும் கொண்டாடலாமே!.


                                                      "சுண்டுனா ரத்தம் வருமா?"
                                        
மீண்டும் சந்திப்போம்

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...